Thursday, March 12, 2009

Wednesday, March 11, 2009

கொத்துக் கொத்தாய்குண்டுமழை பொழியுதம்மா... என் ஈழத் தமிழினமே சரம்சரமாய் செத்து மடியுதம்மா...

ரெண்டு நாலாகி
நாலு பதினாறாகி
நாலா புறம் சிதறுதம்மா...

நெஞ்சை பிளக்குமந்த
நஞ்சு குண்டுகளெல்லாம்
இளம் பெண்டுகளை
தேடித்தேடிக் கொல்லுதம்மா...

ஓடி ஒளிய
வழியேதுமில்லையம்மா...
பாம்பு பட்சிகளோடு- எங்க
பொழுதும் கழியுதம்மா..
பொட்டல் காடே விதியென்று
வாழ்க்கை நகருதம்மா...
நாதியற்று
நரகத்திலே வாழுறம்மா...
சர்வதேச சமூகமே
கண்சாட்சி சொல்லுமம்மா...

கொத்துக் கொத்தாய்
குண்டுமழை பொழியுதம்மா... என்
ஈழத் தமிழினமே
சரம்சரமாய் செத்து மடியுதம்மா...

தட்டில் சோறில்லை
நெஞ்சில் பாலில்லை-இருக்கும்
நிலாவையும் காட்ட முடியவில்லை
வாணூர்தி வண்டுகளாய்
வட்டமடிக்குதம்மா...
இளமொட்டுகளை
இரக்கமின்றி கருக்கதம்மா...

உசுரத்தவிர
உடம்பில் வேறேதும்
இல்லையம்மா-அட
என்னாத்துக்கு
என்னிணத்தை
கருவருக்கத் துடிக்குதம்மா...

சுயநிர்ணய உரிமையென்றால்
சுர்ர்ரென்று ஏறிடிடுதே...

கொத்துக் கொத்தாய்
குண்டுமழை பொழியுதம்மா... என்
ஈழத் தமிழினமே
சரம்சரமாய் செத்து மடியுதம்மா...

அறிவியல் யுகமென்றீர்
பாஸ்பரஸ் குண்டு வீசி
பொசிக்கிடவா?
சாட்டிலைட்டை பறக்கவிட்டீர்
எம்மைக் கொத்தித் தின்றிடவா?

காட்டுமிராண்டிக் கூட்டங்களா
கண்ணைக் கட்டிக் கொண்டீங்களா?
கண்சாட்சி சொல்லிடத்தான்
சர்வதேச சமூகங்களா?

இனவெறிக் கூட்டங்களா
இரையாக மாட்டோமடா
உயிர்பிச்சை கேட்கவில்லை
சுயநிர்ணய உரிமைகேட்டு சாகிறோமடா...

கொத்துக் கொத்தாய்
குண்டுமழை பொழியுதம்மா... என்
ஈழத் தமிழினமே
சரம்சரமாய் செத்து மடியுதம்மா...

சிங்களவன் வார்த்தைக்கும்-உங்க
மன்மோகன் வார்த்தைக்கும்
வேறுபாடு தெரியலியே
எல்லாமும் ஒன்னுபோலத்தானே
எமக்கும் கேட்டிடுதே...

எம்மைக் கொல்லும்
ஆயுதத்திலே-உன்
வேர்வைத்துளி கண்டேனம்மா...

மூச்சுவிட மனம்
மறுத்திடுதம்மா..
வேவு பார்த்திடுதே
ரேடாரென்று... இதை
கண்டும் காணாது
முகம் திருப்பி செல்லுறியே
‘‘அப்பாவித் தமிழனைக்
கொல்லாதேனு’’
கொலைகாரனிடம்
கெஞ்சுறியே!

இனி என்ன
சொல்வதம்மா...
இரக்கமில்லா
உன்னை கண்டு...

கொத்துக் கொத்தாய்
குண்டுமழை பொழியுதம்மா... என்
ஈழத் தமிழினமே
சரம்சரமாய் செத்து மடியுதம்மா...

உன் கண்ணீர்த் துளி
தேவையில்லை...
காசுபணம்
கேட்கவில்லை...
கொலைகார கூட்டமெல்லாம்
இலங்கையில் மட்டுமில்லை...

மன்மோகன்... முகர்ஜியின்னு
பலபேரில் திரியுமந்த
சதிகார கூட்டங்களை
சந்திக்கு இழுத்து வந்து

‘‘பாசிச சிங்களனுக்கு
பங்காளியாக கூட நின்னு
மேலாதிக்கம் செய்திடுதே
இந்திய அரசென்று’’

உரக்கக் குரலெழுப்பிடம்மா... அவன்
குரல்வளையைப் பிடித்திடம்மா.

-இளங்கதிர்.

Tuesday, March 10, 2009

வழக்குறைஞர்கள் போராட்டத்தை ஆதரித்து குரல்கொடுக்க தடை!




உழைக்கும் மக்களே, இது போலீஸ் - வக்கீல் பிரச்சினை அல்ல!
போராடும் மக்கள் அனைவரின் பிரச்சினை!

பொதுக்கூட்டம்
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்

10.3.09 செவ்வாய்க் கிழமை
மாலை 6 மணி

தலைமை: தோழர் முகுந்தன்,
தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சிறப்புரை: தோழர் மருதையன்,
பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

மற்றும்

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள்,
மனித உரிமை அமைப்பினர்.

கலை நிகழ்ச்சி
ம.க.இ.க கலைக்குழு

அனைவரும் வருக!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

***************************************************************

Related:

Wednesday, March 4, 2009

ஈழத்தமிழர்களுக்காக போராடிய புமாஇமு மாணவர்கள் கைதினை கண்டித்து நாளை (மார்ச் 5) தெருமுனைக்கூட்டம்!

இடம்:

குரோம்பேட்

தபால் நிலையம் எதிரில்

காலை 9 மணிக்கு

..

ஈழப் படுகொலையையும் வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலையும் கண்டித்தற்காக பு.மா.இ.மு மாணவர்கள் மீது போலீசு தாக்குதல்! பொய் வழக்கு! சிறை!!

"ஈழத்துல உங்க அக்காளையா... புடுங்குறாங்க? அங்க என்ன நடந்தா உனக்கென்னடா?
நாங்க ஹைகோர்டிலேயே பூந்து அடிச்சோம்...
உங்கள ரோட்ல வுட்டு அடிப்போம்... எங்கள ஒண்ணும் புடுங்க முடியாது!"
- கண்ணன், இன்ஸ்பெக்டர்,
அண்ணாசதுக்கம் காவல்நிலையம்.



காக்கிசட்டை கிரிமினல்கள் கொடுத்த பொய் தகவல்களை செய்தியாக வெளியிட்ட நாளிதழ்கள்


Tuesday, March 3, 2009

ஈழத் தமிழ் மக்களுக்காக வாயிற் கூட்டம் நடத்திய பு.மா.இ.மு மாணவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டு கைது!

ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து வரும் சிங்கள பாசிச அரசுடன் கைகோர்த்து போரை நடத்தி வரும், இந்திய மேலாதிக்கத்தை எதிர்த்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் அதன் தோழமை அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன.

இந்நிலையில் இன்று (மார்ச் 3) காலை ஈழத்தமிழ் மக்களுக்காக மாநிலக் கல்லூரியில் வாயிற்க்கூட்டத்தை ஏற்பாடு செய்து புமாஇமு சேர்ந்த 5 மாணவர்கள் நடத்தினர்.

அப்போது அங்கு வந்த காவல் துறையினர் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கி கைது செய்து உள்ளது.

ஈழத்தமிழ் மக்களுக்காக மாணவர்கள் போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய காலவரையின்றி கல்லூரிகளை மூடிய கலைஞர் அரசு, இன்று நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. வழக்கறிஞர்களை தாக்குதலை தொடர்ந்து இன்று ஈழத் தமிழ் மக்களுக்காக போராடுபவர்களை தாக்குவதையே கலைஞர் அரசு திட்டமிட்டு செய்து வருகிறது.

Saturday, February 28, 2009

இந்தியாவில் வேறு எங்கும் இல்லை! இவை அனைத்தும் தமிழகத்தில் மட்டும்தான்!!



கலைஞர் ஆட்சியில்....









  • ஈழத்தமிழ் மக்களை கொன்றொழிக்கும் சிங்கள பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசின் நம்பகமான ஒரே காவலர் & ஒரே கூட்டாளி!
  • கல்லூரிகளை காலவரையின்றி மூடி மாணவர்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்த ஒரே தமிழனத் தலைவர்!

  • சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் மீது காக்கிசட்டை ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்! ஈழ மக்களின் எதிரி, பார்ப்பனத் திமிர் பிடித்த சு.சாமியை தாஜா செய்ய தி.மு.க அரசின் அடியாள் வேலை!

  • ஒரு நாளைக்கு ஒரு பன்னாட்டு கம்பெனியுடன் அடிமை சாசனத்தில் (புரிந்துணர்வு ஒப்பந்தம்) கையெழுத்து போட்டு விரைவாக நாட்டை விற்கும் ஒரே ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதி!
  • 123 அடிமை சாசனத்தின் நிரந்தர அடிமை!
  • காலை 4 மணி எழுந்து அயராது உழைத்து, இதுவரை இந்தியா கண்டிராத பிரம்மாண்டமான கொள்ளை! ஸ்பெக்ட்ரம் சுவாகா ரூ 60,000 கோடி!!
  • இந்தியாவிலேயே அதிக மக்களை வாழ வழியற்று தற்கொலைக்கு தள்ளி தமிழகம் தொடர்ந்து முதலிடம்!


  • முரசொலி, எதிரொலி, சிரிப்பொலி, இசையருவி, கலைஞர் செய்திகள் என சில வினாடிகளில் தங்களது சுவிஸ் வங்கி பணத்தை ஆடம்பரமாக செலவிடும் ஏழை திரைக்கதை ஆசிரியர்!
  • கால்ஸ் சாராய ஆலைகள் போல பல ஆலைகளுடன் கைகோர்த்து கொண்டு இந்தியாவிலேயே சாராய விற்பனையில் தமிழக அரசு கடைகள் தொடர்ந்து முதலிடம்!



  • குஜராத் இனப்படுகொலையினை ஆதரித்து மெளனம் காத்தவர்!
  • பாசிச காங்கிரசோடும், இந்துவெறி பார்ப்பன பாசிச பாஜகவோடும் மாறி மாறி கூட்டணி கட்டிக் கொண்டும், 'முற்போக்கு & மதச்சாற்பற்றவர்' என தம்மை காட்டிக்கொண்டும் "தாழ்த்தபட்ட மக்கள் ஆதிக்கசாதி வெறியர்களால் தாக்கப்படுவதில்" இந்தியாவிலேயே தமிழகத்தை தொடர்ந்து முதலிடத்தில் வைத்திருப்பவர்!

  • அழகிரி, தளபதி, கனிமொழி, தயாநிதி, கலாநிதி, கயல்விழி, உதயநிதி ஆகிய தமிழக மக்களின் நலன்களுக்காக தள்ளாத வயதிலும் பாடுபடும் ஒரே தாத்தா!

வெளியீடு: தமிழக உழைக்கும் மக்கள்

ஈழத் தமிழ் மக்களை கொன்றொழிக்கும் இனவெறிப்போரில் சிங்கள பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசுக்கு எதிராக போராடுவோம்!



Tuesday, February 24, 2009

குடி - கொண்டாட்டம் - கும்பாபிஷேகம்! போலி கம்யூனிஸ்டுகளின் அதிரடி வியூகம்!!




கடந்த மாதம் 31ம் நாள் முத்துக்குமார் தன்னையே எரித்துக்கொண்டதும் அந்த தீ தமிழகமெங்கும் ஈழத்தமிழர்களுக்காக போராட்டமாக பற்றி பரவியது. ஆனால் சென்னை நெற்குன்றம் பகுதியிலோ வேறு வகையான தீ எரிந்து கொண்டு இருந்தது. என்ன அது என எட்டிப்பார்த்தா, அந்த தீ கோவில் கும்பாபிஷேகத்திலிருந்து எழுந்து வந்தது. உற்று பார்த்தபோது இந்த கும்பாபிஷேகத்தை தலைமை ஏற்று நடத்திக் கொண்டு இருந்தவர் சிபிஎம் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி அவர்கள்.

முத்துக்குமார் உடல் எரிக்கப்பட்டதருணத்தில் இந்த வெள்ளைச்சாமி கோவிலில் யாகத்தில் தீயிட்டு நடத்திக்கொண்டு இருந்தார். கொளத்தூரில் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் தமிழகமே அணிதிரட்டபோது இந்த வெள்ளைச்சாமி ஆட்டோவில் ஓம்சக்தி! பராசக்தி! என முழங்கிகொண்டு இருந்தார்.

முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் அவருடைய நினைவினை நெஞ்சில் ஏற்று ஈழத்தமிழர்களுக்கெதிரான இந்திய அரசின் மேலாதிக்கத்தை எதிர்த்து முறியடிக்க புரட்சிகர சக்திகள் மக்களை அறைகூவி அழைத்துக்கொண்டுயிருந்தபோது, இந்த வெள்ளைச்சாமி டாஸ்மாக் சரக்கினை ஏற்றிக்கொண்டு 'பகுதிவாழ் மக்களே கோவில் பிரசாதத்தை வாங்கி சென்று அம்மன் அருளை பெற்றுச் செல்லூங்கள்' என அழைத்துக்கொண்டுயிருந்தார்.

இவையனைத்தையும் விட 'மார்க்சிய கொள்கை உறுதியோடு மக்கள் உணர்வை நிறைவேற்றிய மக்கள் ஊழியனே! நீர் பல்லாண்டு காலம் வாழ்க!!' என்ற டிஜிட்டல் பேனரில் வெள்ளைச்சாமி பல் இழித்ததை தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

மார்க்சியம், பகுத்தறிவு என்ற வார்த்தைகளை பயன்படுத்திக்கொண்டு பக்தி பரவசம் ஆடுவதும், 'சந்தை சோசலிசம்' என கூறிக்கொண்டு சிங்கூர்,நந்திகிராமில் மக்களை படுகொலை செய்வதும் என இந்த போலிக் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து தங்களது நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றி வருகின்றனர்.

புரட்சிகர சக்திகளான நாம், இவர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தாமல் எதிரிகளை முறியடிக்க முடியாது.

Monday, February 23, 2009

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது காக்கிச் சட்டை ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது

காக்கிச் சட்டை ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்!

தடுக்க வந்த நீதிபதிகளுக்கும் தடியடி!!

  • ஈழமக்களின் எதிரி, பார்ப்பன திமீர் பிடித்த சு.சுவாமியை தாஜா செய்ய திமுக அரசின் அடியாள் வேளை!
    உழைக்கும் மக்களே!
  • இது வக்கில் - போலீசு மோதல் அல்ல! சு.சுவாமி கும்பலுக்கும், சுயமரியாதையுள்ள தமிழர்களுக்குமான போராட்டம்!
  • பார்ப்பன கும்பலுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான மோதல்!மோதுவோம்! எதிரிகளை வீழ்த்தும் வரை!!

Saturday, February 14, 2009

புரட்சிகர கவிதைகள் 3 : "மானங்கெட்ட மன்மோகன் சிங் பேசுகிறேன்"



வாழ்வழியில்லாமல் வறுமையில் உழல்பவரே
பத்துபேர் வாழ்ந்திட லட்சம் பேர் வாடிட
ஆதரிப்பீர் சோனியாவின் வளர்ப்பு நாயான என்னை

ஆட்ம் ஸ்மித்தின் அடியேன் நான்
மக்களே 'மார்க்ஸை மறுத்து ஆடம் ஸ்மித்தை
நெஞ்சில் நிறுத்து !

தொழிலாளி மாளலாம். முதலாளி வாடலாமா?
ஆட்டு மந்தைகளே ஆதரிப்பீர் வறுமை
கொட்டகையில் உங்களை அடைத்திட முயலும்
மன்மோகன் சிங்காகிய என்னை

மகாராஷ்டிராவில் விவசாயிகள் 1 லட்சம் பேர்
வறுமையில் தற்கொலை செய்து கொண்டார்களாமே
நல்லது மிகவும் நல்லது. அப்போதுதான்
மக்கள் தொகை குறைந்து பொருளாதார வளர்ச்சி
ஏற்படும்
பொய்யில்லை, சீனாவில் பல மணி நேரம்
வேலைவாங்கியே மக்களை கொல்கிறது அரசு
நாங்கள் அப்படி செய்யாமல் இளைஞர்களை
கனவு காண சொல்லித்தான் சாகடிக்கிறோம்
சந்தேகம் இருந்தால் கேட்டுப்பாருங்கள்
அப்துல்கலாமை அற்புதம் அற்புதம் என்பார்

மக்களே "பங்கு சந்தை சரிவாம்
பதறுகிறது என் நெஞ்சம்
என் எஜமான் அம்பானியின்
கோடிகள் குறைந்திடுமே

என் தியாகமே விலைவாசியை தாங்கிடும்
சகிப்புத்தன்மை உன்னிடம் உண்டு
அதனை மேலும் மேலும் உயர்த்திடும்
சூத்திரம் என்னிடம் உண்டு

வாங்க வக்கில்லாமல் நீ இருக்கலாம்
வக்கிருக்கும் அம்பானியின் பெரும் இலாபம்
குறையலாமா?

ஒரு லிட்டர் பெட்ரோலை சுத்திகரிக்க சில லிட்டர்
கச்சா எண்ணெய்யை பயன்படுத்தும் நாம்
அதில் தவறு காண்பதில்லை.
ஓர் அம்பானியை உருவாக்கிட 7 ஆயிரம் ஏழைகளை
உருவாக்குவதை தவறு எனலாமா?

தவறு என்கிறார்கள் நக்சல்பாரிகள்
என்ன அநியாயம் பாருங்கள்
முட்டாள் மக்களே! ரஷ்ய நாட்டில் லெனின் என்ற
பயங்கரவாதி அப்பாவி பணக்காரர்களின் சொத்துக்களை
பறித்து கோடிக்கணக்கான ஏழைகளுக்கு கொடுத்தானாம்
அந்த அநியாயத்தை காட்டுமிராண்டிதனம் என்றும்
லெனின் ஒர் முட்டாள் என்றும் மகாகவி பாரதியார்
முழங்கினார்.

லெனினை போன்றே இந்த நக்சல்பாரிகள், அப்பாவி
முதலாளிகளான டாடா, பிர்லா, ரிலையன்ஸ் அம்பானி
போன்றவர்களின் சொத்துக்களை பறித்து கஞ்சிக்கு
இல்லாதவர்க்கெல்லாம் கொடுக்க போகிறார்களாம்.

இன்று இதனை பழிக்க பாரதியார் இல்லாமல்
போகலாம், ஆனால் சி.பி.எம் இருக்கிறார்கள்
ஆகையால் ஜெனங்களே! ஜனநாயகத்தை காத்திட
பணநாயகர்களை வளர்த்திட ஆதரிப்பீர்
பார்ப்பன-பனியாக்களின் பிரதிநிதியான என்னை!

ஏமாளி கூட்டமே! என் ஆசை காதலன்
கொலைகார ஜார்ஜ் புஷ் நம் தேசத்தின் மீது
தீரா காதல் கொண்டிருக்கிறார்.
காரணம்? வேறொன்றுமில்லை.
சந்தை பொருளாதாரத்தின் சொர்க்கமாய் இந்தியாவை
அவர் பார்க்கிறார்.
பார்த்துக்கொள்ளுங்கள், புஷ் மாதிரியான நல்லவர்களுக்கு
சொர்க்கம் பிடிக்கத்தானே செய்யும்

ஏ... தலையாட்டி மொம்மைகளே! சந்தை பொருளாதார்
சொர்க்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்யமே இந்திரன்
டாடா, பிர்லா, அம்பானி பொன்ற தேவர்களும் உண்டு
இவர்களுக்கு சேவை செய்யவெ உங்களை
இறைவன் படைத்திருக்கிறார்.
சந்தேகம் என்றால் கேட்டுப்பாருங்கள் அப்துல்கலாமை
அற்புதம் அற்புதம் என்பார்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா?
அமெரிக்காவை பிடிக்காதவர்கள் நரகத்தில் வாடுகிறார்கள்.
ஆம், குவாண்டநாமோ, அபுகிரைப் சிறைசாலைகள்தான்
நகரம்.

அடிமைகளே! வரலாற்றை புரட்டி பாருங்கள்
கம்யூனிச பூதம் படம் எடுத்து ஆடிய சோவியத்
யூனியனில் 30 ஆண்டுகளில் 5 கோடி
பயங்கரவாதிகளை கொன்றோம்
அதன் தொடர்ச்சியாய் அப்பூதம் ஆடிய
வியட்நாமில் 20 லட்சம் பயங்கரவாதிகளை கொன்றோம்
வடகொரியாவில் 30 லட்சம் பயங்கரவாதிகளை கொன்றோம்

மங்கு மக்களே! ஈராக்கை பாருங்கள் 20 லட்சம்
பெண்களை விதவைகளாகி விட்டோம்.
ஆப்கானை பாருங்கள் அடித்து நொருக்கி விட்டோம்
புரிந்துகொள்ளுங்கள்!

அமெரிக்க ஏகாதிபத்தியமே இவ்வுலகின் தலைவன்
ஏற்காவிட்டால் உங்களுக்கும் எமன்!

சுமைதாங்கிகளே! அடிமை சாசனம் எழுதிதந்துவிட்டேன்
அமெரிக்காவிற்கு பெருமையாய் இருக்கிறது.
என் முன்னோர்கள் காந்தியும், நேருவும் போட்ட துரோக
பாதையில் நான் சரியாக போகிறேன் என்பதை
நினைக்கும் போது.

இப்படியே போனால் 2020 ல்
இந்தியா வல்லரசாய் ஆகிவிடும்.
சந்தேகம் கேட்டுப்பாருங்கள் அப்துல்கலாமை
அற்புதம் அற்புதம் என்பார்.

கடைசியாக,
ஏகாதிபத்தியம் வாழ்க,
அவற்றின் ஒட்டுண்ணி தரகு முதலாளி வர்க்கம் வாழ்க,
தாராளமயம், தனியார்மயம், உலகமையம் என
என் பிள்ளைகள் வாழ்க, ஏகாதிபத்திய மூலதனம் வீங்கி பெருக,
அவற்றினால் இந்த்ய ஏழைகளை ஒழித்து
பணக்கார இந்தியாவை உருவாக்க ஆதரிப்பீர்
ஆளும்வர்க்க நாயான என்னை!

புரட்சிகர கவிதைகள் 2 : "யார் இந்த மகாத்மா?"



வாழ விரும்பிய மக்களை
வாழ்க்கை தளத்தில் இருந்து
வழுக்கி விடவே வழுக்கை தலை.

இந்திய சமஸ்தானங்களில் சாதியை ஒழிக்க
ஈ.வெ.ராமாசாமிகள் உருவாகிவிடக்கூடாது என்பதை
ஊடுறுவி பார்க்கவே மூக்கு கண்ணாடி

பார்ப்பன பன்னிகளின் அருமை பெருமைகளை
பேசுவதற்கே பற்களற்ற பொக்கை வாய்.

பிர்லாவின் மாளிகையில் ஓய்வெடுத்துக் கொண்டே
இந்திய உழைக்கும் மக்களின் கழுத்தை
நெறிப்பதற்காகவே நீண்டு வளர்ந்த
இரு கைகள்

உழைக்கும் மக்களின் விடுதலை போராட்டத்தை
அடக்கி ஒடுக்கவே கையில் கைத்தடி

குஜராத் பனியாக்களின் சொத்துக்களையும்
இந்திய நிலப்பிரபுக்களின் நிலங்களையும்
உழைக்கும் மக்கள் பறித்துவிடுவார்கள்
என்பதற்காகவே, தன்னை பின்பற்ற கோரி
ஒரு முழவேட்டியை உடலில் சுற்றி கொண்ட
எளிமையின் உருவம்,

வெள்ளை எசமானர்களுக்கு சிம்மசொப்பனமாய்
திகழ்ந்த மாவீரன் பகத்சிங்கின்
கழுத்தை முறித்த துக்குகயிறை பார்த்து
புன்னகைத்த முகம்

உலகம் கடவுளுக்கு கட்டுபட்டது
கடவுள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்
மந்திரம் பார்ப்பானுக்கு கட்டுபட்டது
இதனை அன்றே சொன்னான் மனு

ஆம்
மக்கள் கடவுள்கள்
காந்தி என்ற மந்திரத்துக்கு கட்டுபட்டவர்கள்
காந்தி என்ற மந்திரமோ பார்ப்பன-பனியாக்களுக்கு
கட்டுபட்டது.
புரிகிறதா?
மணுதர்ம குப்பையில் உருபெற்று எழுந்த
20ம் நூற்றாண்டின் மனுதான்
பொக்கைவாய் காந்தி
அவனின் மக்கள் விரோத பாசிச செயல்களுக்கான
பட்டம்தான் 'மகாத்மா' என்பது

மொத்தத்தில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில்
தங்களை அர்ப்பணித்து கொண்ட மாவீரர்களை
வெள்ளையனிடம் காட்டி கொடுக்கும் துரோக
கதாபாத்திரம் தான்
மகாத்மா காந்தி

வரலாறுதோறும் அந்த துரோகம் மீண்டும் மீண்டும்
உருபெற்று எழ முயலும்
நாம் அது உருபெற்று எழும் மனுதர்ம குப்பையை
சோசலிச தீயிட்டு கொலுத்துவோம்
மாமேதை மார்க்ஸ் நமக்கு இதனைத்தான்
கற்பிக்கிறார்.

Friday, February 13, 2009

ஈழம்: திருச்சியில் இராணுவ அலுவலகத்தை முற்றுகை - படங்கள்!




ஈழத்தில் இறுதி தாக்குதல் என்ற பெயரில் தமிழ் மக்களின் மீது சிங்கள இனவெறி இராணுவம் தொடுத்திருக்கும் போரில் அன்றாடம் பல பத்து மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்தப் போரில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்களும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக மாணவர்களிடம் ஈழம் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு வந்திருப்பதை தடை செய்ய நினைத்த அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்து 12.02.09 அன்று திறப்பதாக அறிவித்து செயல்படுத்தியது. திறந்த அன்றே திருச்சி நகரின் எல்லாக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை அணிதிரட்டிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள 117ஆவது பிரேதச இராணுவப்படை தலைமை அலுவலகத்தை முற்றுகை இட்டது. இந்தியாவின் இராணுவ அமைப்பையே எதிர்த்து மாணவர்கள் போராடியதைக் கண்டு அதிர்ச்சியுற்ற போலீசு உடனே வந்து போராட்டத்தை நிறுத்துவதற்கு முயன்றது. ஆனால் மாணவர்கள் உறுதியாக நின்று முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.


..
திருச்சி அரசு சட்டக்கல்லூரியின் மாணவரும் பு.மா.இ.மு மாவட்ட இணைச் செயலாளருமான த.கிளர்ச்சியாளன் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பு.மா.இ.மு வின் ஆல்பர்ட் முன்னிலை வகித்தார். உருமு தனலட்சுமி கல்லூரி பு.மா.இ.முவின் கிளைச் செயலாளர் சங்கத்தமிழன் கண்டன உரையாற்றினார். கல்லூரி திறந்த அன்றே இந்த போராட்டத்தை நடத்தியதைக் கண்டு அஞ்சிய போலீசு முன்னணியாளர்களை கைது செய்வதற்கு திட்டம் தீட்டியிருப்பதாக தெரிகிறது. மாணவர்களும் இதை எதிர்பார்த்து போராட்டத்தை தீவிரமாக நடத்துவதற்கும் தயாராகி வருகின்றனர்.

Thursday, February 12, 2009

புரட்சிகர கவிதைகள் 1 : "இரு வகை கவிதைகள்"


உழைக்கும் மக்களின் விடுதலைக்கு பாதை
அமைத்த மாமேதை மார்க்ஸ் போராட்ட கவிதை
வாழ்நாள் முழுவதும் மார்க்ஸை துரத்திய
வறுமை துயரத்தின் கவிதை

மாமேதை மார்க்சின் ஏங்கெல்ஸ் நட்பின் கவிதை.
மார்க்ஸிய எதிரி புருனே பழமைவாதத்தின் கவிதை.
மனிதநேயத்தை உற்பத்தி செய்யும் மார்க்சியம் தத்துவ கவிதை
கொலை,கொள்ளை,கற்பழிப்பு, திருட்டுத்தனம்
விபச்சாரம், சுயநலன், மூடநம்பிக்கை என
மனித அவலங்களை உற்பத்தி செய்யும் முதலாளித்துவம்
அருவறுப்பின் கவிதை.

பெண்ணியத்திற்கே முன்னுதாரணம் தந்த
மார்க்ஸின் ஜென்னி பண்பின் கவிதை
கணவன் இருக்க மாற்றான் இராவணனுக்கு
மடிவிரித்த இராமனின் சீதை கழிச்சடையின் கவிதை.

உலகை குலுக்கிய ரஷ்ய சோசலிச புரட்சி
சரத்திரத்தின் கவிதை
அதை சீரழித்த குருஷேவ் கும்பலின் எதிர்ப்புரட்சி
வக்கிரமான முதலாளியத்தின் மீட்சி கவிதை


உலகின் முதல் சோசலிச புரட்சியின் நாயகன்
லெனின் நடைமுறை கவிதை
மூன்றாம் அகிலத்தின் மார்க்சிய துரோகி காவுட்ஸ்கி
பிற்ப்போக்கின் கவிதை



லெனினின் கனவை நனவாக்கிய, பாசிச ஹிட்லருக்கு
பாடை கட்டிய மாமேதை ஸ்டாலின்
பாட்டாளி வர்க்க சர்வாதிகார கவிதை
மார்க்சியன் என்று கூறிக்கொண்டே மார்க்சியத்தை
கற்பழிக்க முயன்ற துரோகி ட்ராட்ஸ்கி
ஓடுகாலி கவிதை

ஆசியாவின் நோயாளி சீனாவை செஞ்சீனாமாய்
மாற்றிகாட்டிய மாமேதை மாவோ
சீனவானின் சிவப்பு நட்சத்திரத்தின் கவிதை
சீனாவில் மாவோவின் கல்லறையிலேயே சோசலிசத்தை
குழித்தோண்டி புதைத்த துரோகி டெங் சியாவோ பிங்
சி.பி.எம்.மின் குருத்துவத்தின் கவிதை.

அமெரிக்க-பிரெஞ்ச்-ஜப்பானிய ஏகாதிபத்தியங்களுக்கு
மரண அடி கொடுத்து மீண்டு எழுந்த
ஹோசிமினின் வியட்நாம் பினிக்ஸ் கவிதை
வியட்நாமில் புரட்சியாளர்களை எதிர்க்க
துப்பில்லாமல் டயாக்சின் இராசாயன குண்டுகளால்
20 இலட்சம் வியட்நாமிய உழைக்கும்
மக்களை கொன்றுபோட்ட அமெரிக்கா
பயங்கரவாத்தின் கவிதை

அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு சிம்மசொப்பணமாய்
திகழும் ·பிடல் காஸ்ட்ரோ துடிப்பின் கவிதை
50 ஆண்டுகால பொருளாதார தடைகளால் கியூபாவை
சீரழிக்கும் அமெரிக்க பயங்கரவாதம் வயிற்றெரிச்சலின் கவிதை

ஸ்டாலின் காலத்து கிழக்கி ஐரோப்பா
சோசலிசத்தின் கவிதை
அமெரிக்க கைப்பாவை மேற்கு ஐரோப்பா
ஆக்கிரமிப்பின் கவிதை

பெண்ணடிமைத்தனமும், சுரண்டலும் அற்ற
தாய்வழி சமுதாயம் தூய்மையின் கவிதை
மனித அவலங்களை ஈன்றெடுத்த தந்தை வழி
சமுதாயம் சுரண்டலின் கவிதை

கடவுள் மனிதனை படைத்தான் என்ற கருத்துக்கு சவக்குழி
தோண்டிய சார்லஸ் டார்வின் பரிணாமத்தின் கவிதை.
மனிததோற்றத்தை பொய்யாலும், புரட்டாலும் இழிவுபடுத்தும்
பைபிளின் ஆதியாகமம் மூடனின் கவிதை.

தேசிய இன விடுதலை போராட்டத்தை நடத்திகொண்டிருக்கும்
ஈழம், பாலஸ்தீனம், காஷ்மீர், அசாம் தொடர் கவிதைகள்
அத்தீம்பிழம்புகளை அணைக்க முயலும் இலங்கை,
இஸ்ரேல், இந்திய ஆளும்வர்க்கம் விட்டில் பூச்சிகளின் கவிதை

இடைகாலத்தில் பார்ப்பீனியத்துக்கு மரண அடி கொடுத்த
புத்தம் கொடுமைக்கு எதிரான கவிதை.
அதனை கொன்றுபோட்ட பார்ப்பன கூட்டம்
வஞ்சகத்தின் கவிதை


23 வயதில் தாய்மண்னின் விடுதலைக்காக தூக்குகயிறை
முத்தமிட்ட மாவீரன் பகத்சிங் தன்மானத்தின் கவிதை
வெள்ளை துறையிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து
விடுதலை போராட்டத்துக்கு துரோகமிழைத்த
பாரதி கோழைத்தனத்தின் கவிதை.

பார்ப்பனியத்தையும், அதன் மிதவாத வடிவமான
காந்தியிசத்தையும் இறுதிவரை எதிர்த்த
டாக்டர் அம்பேத்கார் சாதி ஒழிப்பின் கவிதை
துரோகத்தையே அரசியலாக்கி
துரோகத்தையே அஹிம்சையாக்கி, துரோகத்தையே விடுதலை
போராட்டமாக்கிய இந்திய உழைக்கும் மக்களுக்கு
துரோகமிழைத்த பொக்கைவாய் காந்தி துரோகத்தின் கவிதை.


தன்மானத்தை தமிழனுக்கு ஊட்டிய கலககார கிழவன்
பெரியார் சுயமரியாதையின் கவிதை.
பெரியார் கொள்கைக்கு துரோகமிழைத்த அண்ணாதுரை
பிழைப்புவாதத்தின் கவிதை.

உழைக்கும் மக்களின் விளையாட்டான கபடி
வீரத்தமிழின் கவிதை
பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவை வேட்டை
காடாய் மாற்றும் ஏகாதிபத்திய கிரிக்கெட்
இளைஞர்களை சீரழிக்கும் போதை கவிதை.

இந்திய ஆளும்வர்க்கத்தை அதிரவைத்த தெலுங்கானா
போராட்டம் இந்தியாவின் சோசலிச தாகத்தின் கவிதை.
அதனை ஈவுயிரக்கமில்லாமல் ஒடுக்கிய பண்டித
நேரு பாசிசத்தின் கவிதை

உலகை அதிரவைத்த நக்சல்பாரி பேரெழுச்சி
வசந்தத்தின் இடிமுழக்க கவிதை.
அதனை இரத்தத்தால் முழ்கடித்த
இந்திய அதிகாரவக்கம்-சி.பி.எம்.மின் துரோகம்
கம்யூனிச துரோகிகளின் சங்கம கவிதை.

21 ம் நூற்றாண்டின் முதல் புரட்சியை பெற்றெடுத்த
எங்கள் நேபாளம் புரட்சிகர கவிதை
அதனை சீரழிக்க முயலும் இந்திய ஏகாதிபத்திய
துரோக அரசு போலி ஜனநாயகத்தின் கவிதை

இந்திய விடுதலைக்கு கட்டியம் கூறும்,
நக்சல்பாரிய புரட்சியாளர்கள்
இன்றைய நம்பிக்கை கவிதை
புரட்சி புரட்சி என்று
இந்திய உழைக்கும் மக்களை ஏமாற்றும் சிபிஐ-சிபிஎம்
ஒழிக்கபட வேண்டிய துரோக வரலாற்றின் கவிதை.

"ஸ்டாலின் சகாப்தம்" ஆவணப்பட பின்னூட்டங்கள்!


தோழமையுடன் பு.மா.இ.முவிற்கு,

வணக்கம். 'ஸ்டாலின் சகாப்தம்' பார்த்தேன். அருமை. தெளிவான உச்சரிப்பும் பொருத்தமான உணர்ச்சியும் பொருந்திவந்துள்ள பின்னனிக் குரல் சிறப்பாக அமைந்திருக்கிறது. தோழர் ஸ்டாலின் மீதான உணர்ச்சிகரமான நேசத்தை படம் மேலும் நெருக்கமாக்குகிறது. படத்தொகுப்பும், பதிவும் தேர்ந்த முறையில் கையாளப்பட்டுள்ளன.சமகால நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டியிருப்பதும் தோழர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியயொன்றாகும். எவ்வித அலுப்பும், சோர்வுமின்றி வெகு விரைவாக படம் செல்கிறது என்பதே படத்தின் வெற்றிக்குச் சான்று. இச்சிறப்பான வெற்றியை ஈட்டிய தோழர்களின் உழைப்புக்கு நன்றியும் பாராட்டுக்களும் சொல்வது எனது கடமையாகும். நன்றி! பாராட்டுகள்!

படத்தில் பின்னணி இசையை இணைத்திருக்கலாம். அதற்கான பல்வேறு வாய்ப்புகள் இருந்தும் ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை. இனிவரும் பிரதிகளில் கூட இணைத்துக் கொள்ளலாம். இன்னும் தொடர்ந்து படங்கள் கொண்டு வர முயலுங்கள். வாழ்த்துக்கள். நன்றி.

தோழமையுடன்
குருசாமி மயில்வாகனன்.
சிவகங்கை.
மேலும் ஸ்டாலின் சகாப்தம் ஆவணப்பட
பின்னூட்டங்கள்
வரவேற்கப்படுகிறது.

இராணுவ தலைமையகத்தை புமாஇமு தலைமையில் முற்றுகை!

Tuesday, February 3, 2009

கால வரையற்று மூடிய கல்லூரி-விடுதிகளை உடனே திற!

Related:

ஈழம்: சென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல்- புகைப்படங்கள்- வீடியோ!!

சனவரி 30 காலை 10 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலிருந்து திடீரென்று வெளியே வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்தார்கள்.
..
சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இப்போராட்டத்தில் பு.மா.இ.மு மாணவர்கள் நெடுஞ்சாலையை மறித்து நாடகம் நடத்தினர். மாணவர்கள் முரையாற்றினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்றன. நேரம் செல்லச்செல்ல மாணவர் கூட்டமும் மக்கள் கூட்டமும் அதிகரிக்கவே செய்வதறியாமல் திகைத்த்து போலீசு. நோக்கம் நிறைவேறிய பின்னர் மக்களின் சிரமத்தைக் கணக்கில் கொண்டு ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் மறியலை விலக்கிக் கொண்டார்கள் மாணவர்கள். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.



Thursday, January 29, 2009

பச்சையப்பன் கல்லூரியிலிருந்து மாணவர்கள் போராட்டம் ஆரம்பம்! காலை 9.30 மணி!!



ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில்
சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும்
இந்திய அரசைக் கண்டித்து
மறியல்
மாணவர்கள் போராட்டமானது!
இடம்
பச்சையப்பன் கல்லூரி
காலை
9.30 மணி

Wednesday, January 28, 2009

ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில் சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மறியல்!


ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில்
சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும்
இந்திய அரசைக் கண்டித்து சென்னையில்

மறியல்




இடம்

ரிப்பன் மாளிகை அருகில்

காலை 10.30 மணிக்கு






பிரச்சார இயக்கத்தின் முழக்கங்கள்:

கொலைகாரன் மன்மோகன் சிங்கே,
உன் டாடாவும், அம்பானியும்
இலங்கையில் கொள்ளை லாபம் அடிக்க
எங்கள் ஈழத்தமிழர்கள் சாக வேண்டுமா?

இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசிய
மேலாதிக்கத்திற்காக,
டாடா-அம்பானி போன்ற தரகு முதலாளிகள்
இலங்கையில் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக,
சிங்கள இனவெறி இராணுவத்திற்கு
ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து ஏவிவிடும்
கொலைகார மன்மோகன் சிங் அரசை
எதிர்த்துப் போராடுவோம்!

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்குக்
குரல் கொடுப்போம்!

Related:

ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!

ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!

Friday, January 23, 2009

"ஸ்டாலின் சகாப்தம்" ஆவணப்படம்! ஜனவரி 25 வெளியீடு!






முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு


புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின்


விற்பனை அரங்கில் கிடைக்கும்.






"ஸ்டாலின் சகாப்தம்" ஆவணப்படம்



மாநாடு சிறப்பு விலைக்குறைப்பாக



20% போக ரூ56 க்கு கிடைக்கும்






Related:


முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு! நிகழ்ச்சி நிரல்!!

Thursday, January 22, 2009

மௌனம் எனும் கொடிய ஆயுதம்!

குண்டுகள்
வெடித்து சிதறு முன்பே
ஊடகங்களி்ல்
தெரித்து விழுகின்றன
ஐ.எஸ்.ஐ, சிமி,
இலஸ்கர் இ தொய்பா,
இந்தியன் முஜாகிதீன்கள்-தான்
காரணமென்று

மழித்த மீசை
நெடுந்தாடி...
"மயிரை" வைத்தே
மதிப்பிடப்படும்
பயங்கரவாதம்!

நான்டெட்டும்
மாலேகானும்
மறுதலிக்கிறது-இம்
மதிப்பீட்டை!

சடைபிடித்த முடி
ஆளுயர தாடியோடு
அயோத்தி-தெருக்களில்
அம்மணமாய்
அலையும்
சன்னியாசிகளிடம்
மட்டுமல்ல...

கொழுப்பேறிய
உடம்போடு
அரை-அம்மணமாய்த்
திரியும்
சேத்துப்பட்டு
"சுகவாசி" யிடமும்
தேவை
எச்சரிக்கை!

கண்ணத்தில்
போட்டுக் கொள்ளும்-முன்பு
திருநீற்றுப் பையைத்
துலாவிப் பாருங்கள்-அதில்
ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து
இருக்கலாம்!

எதற்கும்
கையிலுள்ள
தண்டத்தை
தடவிப் பாருங்கள்
தொலைதூர
இயக்குவிசை
பொத்தான்-அதில்
பொதிந்துமிருக்கலாம்!

"காவி" கொடி
பிடித்தலையும்
காட்டுமிராண்டிக்
கூட்டத்திடமிருந்து
விலகியிருப்பதே
நல்லது!

இல்லையேல்
விலங்குகளாய்
நாமும் மாறிட நேரும்
குஜராத்,ஓரிஸா போல...

பார்ப்பன
பயங்கரவாதத்துக்கு
நாம் வழங்கிய
பலமான ஆயுதம்
"மௌனம்"!

மனிதனாய்
மாற
மௌனம்
கலைவோம்!

-இளங்கதிர்.

ஆர்.டி.எக்ஸ். மௌனம்!

குண்டுகள்
வெடித்து சிதறு முன்பே
ஊடகங்களி்ல்
தெரித்து விழுகின்றன
ஐ.எஸ்.ஐ, சிமி,
இலஸ்கர் இ தொய்பா,
இந்தியன் முஜாகிதீன்கள்-தான்
காரணமென்று

மழித்த மீசை
நெடுந்தாடி...
'மயிரை' வைத்தே
மதிப்பிடப்படும்
பயங்கரவாதம்!


மாற்றிக் கொள்ளுங்கள்
மதிப்பீடுகளை!

நான்டெட்,
மாலேகான்,
ஆர்.எஸ்.எஸ்.,
பி.ஜே.பி.-இது
பார்ப்பன பயங்கரவாதம்!


சடைபிடித்த முடி
ஆளுயர தாடியோடு
அயோத்தி-தெருக்களில்
அம்மணமாய்
அலையும்
சன்னியாசிகளிடம்
மட்டுமல்ல...

கொழுப்பேறிய
உடம்போடு
அரை-அம்மணமாய்த்
திரியும்
சேத்துப்பட்டு
"சுகவாசி" யிடமும்
தேவை
எச்சரிக்கை!

கண்ணத்தில்
போட்டுக் கொள்ளும்-முன்பு
திருநீற்றுப் பையைத்
துலாவிப் பாருங்கள்-அதில்
ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து
இருக்கலாம்!

எதற்கும்
கையிலுள்ள
தண்டத்தை
தடவிப் பாருங்கள்
தொலைதூர
இயக்குவிசை
பொத்தான்-அதில்
பொதிந்துமிருக்கலாம்!

அவர்கள்
நாளையே
வீசலாம்-அடுத்த
வெடிகுண்டை

நம்
'மௌனத்தை'
அதில் நிரப்பி!

தேவை
எச்சரிக்கை மட்டுமல்ல...

-இளங்கதிர்.

Friday, January 16, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு! ஜனவரி 25, 2009





முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!
****************
முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!
************************
கருத்தரங்கம்
பொதுக்கூட்டம்
கலைநிகழ்ச்சி
****************
ஜனவரி 25, 2009
அம்பத்தூர்
சென்னை
உழைக்கும் மக்கள் அனைவரும் வர்க்கமாக அணிதிரளுவோம்!
அழுகிய முதலாளித்துவத்தை புதைப்போம்!!

டாடாக்களின் புரட்சியும் மக்களைத் தின்னும் கண்டுபிடிப்புக்களும்


மக்களின் கார் பிணங்களின் மீது பவனி


“ஏனுங்க டாடாவோட நானோ காரைப் பார்த்தீங்களா?, என்ன அம்சமா இருக்கு தெரியுங்களா” என்ற சித்தாளின் உடையாடலோ, “அம்மா எனக்கு நானோ கார் வாங்கிதந்தாதான் சாப்பிடுவேன்” என்ற கெஞ்சல்களையோ கேள்விப்படவில்லை. ஆனால் இதை விட பல மடங்கு பேச்சுகள் இந்தியா முழுவதும் பேசப்பட்டதாக பத்திரிக்கைகள் புளுகிக் கொண்டிருக்கின்றன.



பத்திரிக்கைகள் டாடாவின் 1 லட்சம் ரூபாய் நானோ கார் (வரிகளுடன் 1.25 லட்சம்) வரவினை டாடாவின் புரட்சி என்றே அழைக்கின்றன. 1980 களில் இந்திய சாலைகளில் மாருதி நிறுவனம் முதல் சாலைப் புரட்சியை நடத்திகாட்டியதாகவும் இந்த நானோ கார் இரண்டாவது புரட்சியாகவும் கொண்டாடப்படுகின்றன. சிறிது டாடாவின் காரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எஞ்சின் - 624 cc, 33 php, ஒரு லிட்டருக்கு 20 கி.மி மேல், 4 ஸ்பெசல் கியர், அதிகபட்ச வேகம் 90 கி.மி. அனைத்து பாதுகாப்பு விதிகளையும் நிறைவு செய்கிறது. ஏழை நடுத்தர மக்களுக்காகவே உலகிலேயே மிக குறைவான விலையில் விற்கப்படும் முதல் கார் 2500 டாலர் (அ) 1 லட்சம். இதற்கு அடுத்தப்படியாக க்யூ க்யூ3 காரோ 2 லட்சம்.

இந்த காருக்கு இருக்கும் விற்பனைக்கான வாய்ப்பை வாய் கிழிய கிழிய நிபுணர்கள் உந்தி தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9% எட்டி விட்டது, பங்குச் சந்தை 21,000 (பலுன் ஊதிய போது) புள்ளிகளை தாண்டி எகிறிகொண்டிருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 40 லட்சம் கோடியையும், தனிநபர் சராசரி வருமானம் ரூ 40,000 ஐயும் தொட்டு வல்லரசுக்கு பிளிரிக்கொண்டிருக்கும் இந்த வேலையிலன்றி வேறெப்போது புரட்சியினை சாதிக்கமுடியும் என்ற கேள்விகளால் பத்திரிக்கைகளை நிரப்பிக் கொண்டு இருக்கின்றனர். காம்ரேட் டாடா ஆரம்பித்து வைத்த இந்த புரட்சியை நீடித்து கொண்டு செல்வதற்காகவே பல கார் நிறுவனங்கள் புதிதாக இந்தியாவில் இறங்க உள்ளன.

“உணவி , உடை, இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு மிதமிஞ்சிய பணப்புழக்கம் இருக்கும் ஒரு நாட்டில் இவ்வருடம் மட்டும் கார்களில் 75 மாடல்கள் தான் அறிமுகமாகுமென்று சற்றே கவலையளிக்கிறது”

டாடாவுக்கு மட்டும் தான் மக்கள் தலையில் மிளகாய் அரைக்க உரிமை இருக்கிறதாயென்ன என்றவாறே கடந்த பத்து மாதங்களில் மட்டும் ஆறு பெரிய நிறுவனங்களுக்குள் ரூ 18,400 கோடியில் பேரத்தில் இறங்கியிருக்கின்றன. டாடா, அசோக் லேலண்ட், பஜாஜ் போன்ற நிறுவனங்கள் மக்களுக்கு ஏற்றபடி விலை குறைவாக உள்ள காரை எப்படி தயாரிப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறதாம். டாடா ஒரு லட்ச ரூபாய்க்கு மக்கள் கார் கொடுப்பதால் நான் 1.3 லட்சத்திற்கு கார் தருகிறேன் என மல்லுக் கட்டுகிறார் ராஜீவ் பஜாஜ்.

அய்ரோப்பிய மற்றும் அமெரிக்க கார் சந்தை தேக்கமடைந்திருப்பதால் இந்தியாவில் 45 கோடி நடுத்தர மக்கள் இருப்பதாகவும், அவர்கள் அத்தேக்கத்தை (அடைப்பை) சரி செய்துவிடுவார்களென்று பன்னாட்டு கார் நிறுவனங்கள் முண்டியடித்துக் கொண்டு கடையை விரிக்கின்றன. 10 லட்சம் கார்களையும், 76 லட்சம் பைக்கு களையும் நுகரும் இந்திய சந்தையில் 2016க்குள் 40 லட்சம் கார்கள் 1 ஆண்டுக்கு திணிப்பதற்கு காத்திருக்கிறார்கள்.

இந்த மக்கள் காரின் வரவுக்கு எந்த சமூக அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை இக்கார் சமூக அக்கறையினால் உருவாக்கப்பட்டதெனில் ஜெயேந்திரன் கூட சமூக அக்கறையினாலேயே கொலைகளையும், கற்பழிப்புக்களையும் தீண்டாமையையும் நெறிப்படுத்தினான் என்றே கூறலாம். சினிமா கழிசடைகளும், ஏகாதிபத்திய நாய்களும் தாங்கள் பொறுக்கித்தின்பதற்காக இதை சமூக அக்கறையாக பயன்படுத்திக்கொள்கின்றன. மூன்று இந்தியர்களின் ஒருவர் பஞ்சைப் பராரியாக இருப்பதும், 91 கோடி மக்களின் வாழ்க்கைத்தரம் ரூ 80க்கும் கீழ் போய்விட்ட இத்தேசத்தில் இந்த ஏகாதிபத்திய “புடுங்கிகள்”, மக்களின் கவலையை மறக்க விலை குறைவாக காரைக் கண்டுபிடிக்கிறார்களாம்.

விவசாயம் செய்ய முடியாது என மறுகாலனிய சுருக்கில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் உயிரைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். வேலையில்லாத இளைஞர்களின் பட்டாளம் கோடிக்கணக்கில் பெருகிக் கொண்டிருக்கிறது. பொதுத் துறைகளை தனியார்மயமாக்கம் என்ற பெயரில் சீரழித்து தொழிலாளர்களை வீதியில் வீசியெறிக்கின்றனர். இப்படிப்பட்ட மக்களுக்காகத் தான் மக்கள் கார் தயாரிக்கப்பட்டதாம்.

ரத்தன் டாடா ஒரு பேட்டியில் கூறியது “குறைந்த லாபத்தில் காரை தயாரிக்க முடியாது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பங்களிப்பு செய்ய விரும்பினோம்…..குறைவான லாபத்தோடு சில தியாகங்களை செய்தாக வேண்டும்”

110 கோடி கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஒரு முதலாளியால் முடியும். இந்த புரட்சியை சாதிக்கவே மக்களை வெளியேற்றி நந்திகிராமில், சிங்குரில் நிலம் கையகப்படுத்தினோம் என்கிறது சிபிஎம். இதனை அடுத்த தேர்தலுக்குள் புரட்சி சாதிக்கப்பட்டு சிபிஎம்-ன் பேனர்களில் டாடா படம் கூட பொறிக்கப்படலாம். ரசியப்புரட்சியை நடத்திக்காட்டிய லெனின் படத்துடன், மாமா வேலை பார்த்த சுர்ஜித்தின் படத்தை போடும் போது மக்களின் வாழ்க்கையை (?) உயர்த்த விரும்பி தனது இலாபத்தை குறைத்துக் கொண்ட மகோன்னதத் தலைவனின் படத்தை ஏன் போடக்கூடாது என்ற வகையில் தீக்கதிர் தலையங்கம் கூட எழுதலாம்.

“முதாலளித்துவத்தின் எந்த கண்டுப்பிடிப்பும் மக்களுக்காகயிராது சந்தைக்காகவே இருக்கும்”

கார் என்பதைப் பொறுத்த வரை இன்று மக்களுக்கு இடையூராகவே உள்ளது. ஒரு காரில் அதிகபட்சம் 6 பேர் உட்கார முடியும். இரண்டு கார்களின் அளவானது ஒரு பேருந்தின் அளவுக்கு சமமாக உள்ளது. குறைந்தபட்சம் 60 பேர் உள்ள பேருந்தின் இடத்தை 12 பேர் கொண்ட கும்பல் ஆக்கிரமிக்கின்றது. காரை வாங்குவதால் நடுத்தர மக்களும், அதனை பயன்படுத்துவதால் நடுத்தர - ஏழை மக்களும் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் இரு சக்கரவாகனங்களின் எண்ணிக்கை இறைவாகவே இருந்தது. இன்று இரு சக்கரவாகனமின்றி வாழ்நிலை மிகவும் சிரமம் என்ற நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது.

இந்த இருசக்கர வாகனத்தின் பெருக்கம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதே! சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்துவதை தவிர்த்துவிட்டு திரும்பிபக்கமெல்லாம் விளம்பரங்கள் “சார் பைக் லோன் வேண்டுமா உடன் தொடர்புக்கு!!” என்று. இவை விளம்பரங்களாக செயல்படவில்லை. கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற ஆணையாகவே இருந்தது. அப்படி வாங்கியவர்கள் லோன் கட்டமுடியாமலோ (அ) Petrol-க்கென்றே வருமானத்தில் பெரும்பகுதியை செலவழித்துக் கொண்டு இருப்பதாக வேதனையோடு சொல்கிறார்கள் இப்படி “இந்த சனியனாலதான் எல்லாப் பிரச்சினையுமே , இருந்தாலும் இதைவிடமுடியலையே!

கடந்த ஐந்து ஆண்டுகளில் Petrol பொருட்களின் விலை 5 மடங்காகியிருக்கிறது. தற்போது மீண்டும் Petrol, டீசல், கேஸ் விலையை ஏற்றப்போவதாக அரசு கூறிவருகிறது. இந்நிலையில் அறிமுகப்படுத்தப்படும் மக்கள் கார் மக்களின் வாழ்க்கையை கேலிக்குரிய ஒன்றாகவே மாற்றும். பைக்கிற்கான கடனைப் போலவே தற்போன காருக்கான கடன் சலுகைகள் மிக அதிகமாக உள்ளது. சமூக அடையாளத்திற்கான இடத்தை நகரக்ங்களைப் பொருத்தவரை பைக்கிடமிருந்து கார் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம் காருக்கான மூலதன செலவு (initial cost) அதிகமாகவும், பராமரிப்பு செலவு (maintenance cost) குறைவாகவும் இருந்தது. தற்போது மூலதன செலவு குறைந்தும், பராமரிப்பு செலவு அதிகமாகவும் மாற்றப்படுகின்றது. எப்படியிருந்தாலும் தன்னுடைய லாப விகித்ததை சரி செய்து கொள்கிறார்கள் முதலாளிகள்.

“சாலைகள் மேம்பட வேண்டும் என்பது உண்மைதான் அதற்காக குறைந்த வருமானம் கொண்டவர்களின் வாழ்கைத்தரம் உயரக் கூடாது என சொல்லக் கூடாது” என்கிறார்கள் புத்திசாலிகள். முதலாளித்துவ நாய்களின் வாலை பிடித்து கொண்டு திரியும் இந்த அறிவிஜீவிகள் கிராமப்புறங்களில், ஏன் சென்னை போன்ற நகரங்களின் தெருக்களில் கூட சாலைகள் குண்டும் குழுகளும் பல்லைக்காட்டிக்கொண்டிருப்பதை ஒருக்காலும் பேசமாட்டார்கள். உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சீரழித்தவர்களே சொல்கிறார்கள். “உங்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றப் போகிறோம், நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்னேறித்தானாக வேண்டும்”

இன்னமும் இந்தியக்கிராமங்களில் மக்கள் டிராக்டரில் பயணம் செய்வதால் இந்தக்கார் பெரிய ஹிட் ஆகுமென்கிறது டாடா. 50,000 ரூபாய் கொடுத்து பைக்வாங்கும் ஒருவரால் கொஞ்சம் சிரமப்பட்டால் லட்சரூபாய் கார்வாங்கலாம் என்ற கூற்றும் நிலவுகிறது. இதில உண்மையும் இருக்கிறது. மக்களை மேலும் மேலும் கடனாளியாக்க இப்படி எத்தனையோ திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பட்டபின் திருந்தலாம் என்று வாங்கிய காரை விற்க போகும் போது அது 3/1 பங்கு கூட பெறாமலிருக்கும். பைக்காக இருக்கும்பட்சத்தில் நான்கு தெரு தள்ளி கூட நண்பர் வீட்டில் நிறுத்திவிடலாம் மாத தவணை வசூலிக்கும் குண்டர்களிடமிருந்து தப்பிப்பதற்காக. காரை எங்கு போய் நிறுத்துவது?

இன்று வீட்டு வாடகைக்கு இடம் கிடைக்காத நிலையில் காருக்காக தனியாக இடம் தேடி நடுத்தர வர்க்கம் அலையும் நிலை வரலாம். இது அதிகப்படியான கற்பனை அல்ல. மறுகாலனியாதிக்கத்திற்கெதிராக களத்திலிறங்காத வரை இது தொடர்ந்து கொண்டே தானிருக்கும்.

“வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று நினைப்பவர்களின் நோக்கத்தை சிறுபிரிவினர் விரும்பாதது போலத் தெரிகிறது…. மீதமுள்ள சமூகத்தினருக்காக முடிவெடுக்க சிறுபிரிவினருக்கு உரிமையிருக்கிறதா என்பதே என் கேள்வி” என்கிறான் டாடா. ரத்தன் டாடா முடிவெடுத்து விட்டார் கார் தயாரிக்க, அதுவும் லட்ச ரூபாய்க்கு மக்களின் வாழ்க்கைததரத்தை உயர்த்துவதற்காக. அவர் முன்னரே சொன்னது போல் குறைவான லாபத்தை அவர் ஏற்பார், தியாகங்களோடு, உயர்ப்பலியையும் நந்திகிராம், சிங்கூர் மக்கள் ஏற்க வேண்டும்.

இன்று நீதிமன்றத்தில் இந்த சிபிஎம் குண்டர்கள் வைத்த டாடாவின் குறைந்த லாபத்தையும், மக்களின் அகதிகளாக வெளியேற்றப்படுவதையும் சரிபார்த்த “நீதிமான்கள்” நிலத்தை கையகப்படுத்தியது சரிதான் என்று அதனை எதிர்த்து தொடர்ந்த 11 வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிட்டது.

மக்கள் கார் (!?) புரட்சிக்கு பின்னாலுள்ள பிளாஷ் பேக்கை பார்ப்போம். “2003ம் ஆண்டு ஒரு நாள் மும்பையில் இரவு மழையின்போது சென்று கொண்டிருந்தார் டாடா. அப்போது ஒரு இளந்தம்பதி இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார்களாம். மழைநேரத்தில் இந்த அபாயகரமான பயணம் அவர் மனதில் விதையாகி தற்போது மரமாகிவிட்டதாம்”

அய்யா, புரட்சி இப்படி ஒரு முதலாளியின் செரிக்காத வாயு நாற்றத்திலிருந்து எழாது.

புரட்சி என்பது மக்களின் போர்க்குரல், எரிமலையின் சீற்றம். இந்த சீற்றம் நிகழும் அன்று காம்ரேடு டாடாக்களும், அவர்களின் பாதந்தாங்கிகளாக அருவருடிகளும், போலிகளும் சமாதியாகிக் கொண்டிருப்பார்கள்.

நன்றி இரும்பு

முதலாளித்துவம் கொல்லுது - சத்யம் IT ஊழியரின் தற்கொலை




தற்கொலை செய்து கொண்ட சத்யம் ஊழியர்


சத்யம் கம்பேனி 420 வேலை செய்து மாட்டிக் கொண்ட கதை இப்போது அனைவருக்கும் தெரிந்த விசயமாகிவிட்டது. இதே போல ஊழல் குற்றச்சாட்டில் விப்ரோ நிறுவனமும் அசிங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஒட்டிய கிளைக் கதையில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி கும்பலை சேர்ந்தவரின் பாலியல் வக்கிர கதைகள் மீண்டும் அரங்கிற்கு வந்து அசிங்கப்பட்டது.

இத்தனை அயோக்கியத்தனமும் செய்யும் இந்த பகாசுர சூதாட்ட முதலாளிகள், 420 பேர்வழிகள் எந்த தண்டனையும் அனுபவிப்பது இல்லை. ஆனால் எந்த தவறும் செய்யாதா அந்த நிறுவனங்களில் பணி புரிபவர்கள்தான் இதன் கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள். இந்திய தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கொழுத்த பணம் சேர்த்த தொழில்துறை முதலாளிகள் அந்த பணத்தை சூதாடி தோற்றனர். இன்று சூதாட்டத்தின் நஸ்டத்தை தொழிலாளர் தலையில் சுமத்தி வேலையை விட்டு நீக்குகிறார்கள், வயிற்றில் அடிக்கிறார்கள்.

அது போலவே இந்திய IT துறை சுதாடிகளும், 420 களும் செய்கிறார்கள். கடந்த சில மாதங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் வேலையை விட்டு தூக்கப்பட்டுள்ளனர் IT துறையில். IT துறை சூப்பரு சூப்பரு என்று சொல்லி எல்லாரையும் அதனையே படிக்க சொல்லி ஊக்கப்படுத்திய அரசுகளோ இன்று IT துறை கவிழ்ந்து கிடக்கும் நேரத்தில் முதலாளிகளுக்கு அறிவுரை வழங்கி காப்பாற்றுகிறது. இந்த அரசை நம்பி IT படித்தவர்களைப் பற்றியோ அல்லது விவசாயம் செத்து போனதால் நகரத்துக்கு வந்த தொழில்சாலை தொழிலாளி பற்றியோ இந்த அரசுக்கு கவலையில்லை. வாழ்வையிழந்த, எதிர்காலம் நிச்சயமற்ற சதாரண மக்களுக்கு வாய்க்கரிசி போட வருகிறது அரசு. முதலாளிகளுக்கோ சின்ன எறும்பு கடி என்றால் கூட பெயில் அவுட் எடுக்கிறது.

வெட்கமின்றி கொஞ்சம் கூட பயமின்றி சத்யம் கம்பேனியில் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சொல்லி அறிவுரை செய்துள்ளது இந்திய அரசு. இதன் மூலம் அதனது லாபம் 20% அதிகமாகும் என்று இந்த அறிவுரையை சொல்லியுள்ளது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு இன்னும் வரவில்லை என்று நாம் எண்ணியிருந்த வேளையில் மேலே பதியப்பட்டுள்ள சத்யம் ஊழியரின் தற்கொலை செய்தி வெளி வந்துள்ளது. அவரை வேலையை விட்டு தூக்கியதால் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவருகிறது.

எந்தளவுக்கு இந்த அரசு IT ஊழியர்களையும், இந்திய தொழிலாளர்களையும் கேவலமாக, முதுகெலும்பு அற்றவர்களாக நினைத்திருந்தால் 10,000 பேரை வேலையை விட்டு தூக்கிவிட அறிவுரை சொல்லியிருக்கும். மோசடி செய்தவனெல்லாம் சொகுசாக வலம் வருகிறான். வயிற்றுப் பிழைப்புக்கு கிடைத்த வேலையை செய்யும் சதாரணம் மக்களோ இப்படி உடனுக்குடன் தண்டனை அனுபவிக்கிறார்கள்.

ஒரு படத்தில் வடிவேலு சொல்லுவார், ஓரமா நின்னு பாத்தத்துக்கு தண்டனையாடா என்று அது போல முதலாளிகளின் மோசடிகளை நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்ததற்கு நமக்கு தண்டனையா? இனிமேலும் இதை அனுமதிக்க முடியாது. இவர்கள் இனிமேலும் இந்த நாட்டை அதன் உற்பத்தியை நிர்வாகிக்கும் தகுதியை கொண்டிருக்க முடியாது. நாம்தான், மக்கள்தான் அனைத்தையும் உருவாக்குகிறோம் இதனை நாமே நிர்வாகிப்போம்.

தனிமனித லாப வெறியில் வித விதமாக சூதாடி, மோசடி செய்து, சதி திட்டம் தீட்டி நாட்டை நாசமாக்கும் பன்னாட்டு, தரகு பாகசுர முதலாளிகளை நாட்டை விட்டு விரட்டினால்தான் அனைவருக்கும் விடுதலை. வருத்தபப்ட்ட பாரம் சுமந்தது போதும் IT ஊழியர்களே. உங்களது சகோதரர்கள் உங்களுடன் தான் இருக்கிறார்கள். சிறிது கண் திறந்து பாருங்கள்.

முதலாளித்துவம் கொல்லும்! கம்யுனிசமே வெல்லும்!!

அசுரன்
ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!
..
விப்ரோ, சத்யம் போன்ற கம்பேனிகள் மோசடி 420 பேர்வழிகள் - உலக வங்கி அறிவிப்பு!!
..
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!
..
இங்கு கிழிந்த டவுசருக்கு மாற்றாக புது டவுசர் கிடைக்கும்!! - ரொம்ப நல்லவர்கள் கடை!!
..
அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!
..
ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!
நன்றி அசுரன்

டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி விடுதியை திறக்க வாக்குறுதி! இது வாதாடியல்ல - போராடி பெற்ற உரிமை!

Related Links:
புமாஇமு - பிரசுரங்கள், சுவரொட்டிகள்
மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற! தீண்டாமை குற்றம் செய்த முக்குலத்தோர் மாணவர் பேரவையைச் சார்ந்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
சாதி-மத வெறி அமைப்புகளைப் புறக்கணிப்போம்! மாணவர்களாகிய நாம் ஒரு வர்க்கமாக ஒன்றிணைவோம்!
ஆதிக்க சாதிவெறி சக்திகள் மீது நடவடிக்கை எடு!
..
தமிழரங்கம் - கட்டுரைகள்
தேவை : சாதிக்கெதிராய் கலகம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்
சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியுள் மையங்கொண்ட இந்தச் சாதியக் கலவரமானது
சட்டம் படிக்க வந்த காட்டுமிராண்டிகளின் கதை....
..
வினவு - கட்டுரைகள்
சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!
சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை - அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !ஆனந்த விகடனின் சாதி வெறி !

கால்ஸ் சாராய ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம்!


இணைப்பு