Tuesday, March 3, 2009

ஈழத் தமிழ் மக்களுக்காக வாயிற் கூட்டம் நடத்திய பு.மா.இ.மு மாணவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டு கைது!

ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து வரும் சிங்கள பாசிச அரசுடன் கைகோர்த்து போரை நடத்தி வரும், இந்திய மேலாதிக்கத்தை எதிர்த்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் அதன் தோழமை அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன.

இந்நிலையில் இன்று (மார்ச் 3) காலை ஈழத்தமிழ் மக்களுக்காக மாநிலக் கல்லூரியில் வாயிற்க்கூட்டத்தை ஏற்பாடு செய்து புமாஇமு சேர்ந்த 5 மாணவர்கள் நடத்தினர்.

அப்போது அங்கு வந்த காவல் துறையினர் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கி கைது செய்து உள்ளது.

ஈழத்தமிழ் மக்களுக்காக மாணவர்கள் போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய காலவரையின்றி கல்லூரிகளை மூடிய கலைஞர் அரசு, இன்று நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. வழக்கறிஞர்களை தாக்குதலை தொடர்ந்து இன்று ஈழத் தமிழ் மக்களுக்காக போராடுபவர்களை தாக்குவதையே கலைஞர் அரசு திட்டமிட்டு செய்து வருகிறது.

No comments:

இணைப்பு