Thursday, January 29, 2009

பச்சையப்பன் கல்லூரியிலிருந்து மாணவர்கள் போராட்டம் ஆரம்பம்! காலை 9.30 மணி!!



ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில்
சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும்
இந்திய அரசைக் கண்டித்து
மறியல்
மாணவர்கள் போராட்டமானது!
இடம்
பச்சையப்பன் கல்லூரி
காலை
9.30 மணி

Wednesday, January 28, 2009

ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில் சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மறியல்!


ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில்
சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும்
இந்திய அரசைக் கண்டித்து சென்னையில்

மறியல்




இடம்

ரிப்பன் மாளிகை அருகில்

காலை 10.30 மணிக்கு






பிரச்சார இயக்கத்தின் முழக்கங்கள்:

கொலைகாரன் மன்மோகன் சிங்கே,
உன் டாடாவும், அம்பானியும்
இலங்கையில் கொள்ளை லாபம் அடிக்க
எங்கள் ஈழத்தமிழர்கள் சாக வேண்டுமா?

இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசிய
மேலாதிக்கத்திற்காக,
டாடா-அம்பானி போன்ற தரகு முதலாளிகள்
இலங்கையில் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக,
சிங்கள இனவெறி இராணுவத்திற்கு
ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து ஏவிவிடும்
கொலைகார மன்மோகன் சிங் அரசை
எதிர்த்துப் போராடுவோம்!

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்குக்
குரல் கொடுப்போம்!

Related:

ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!

ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!

Friday, January 23, 2009

"ஸ்டாலின் சகாப்தம்" ஆவணப்படம்! ஜனவரி 25 வெளியீடு!






முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு


புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின்


விற்பனை அரங்கில் கிடைக்கும்.






"ஸ்டாலின் சகாப்தம்" ஆவணப்படம்



மாநாடு சிறப்பு விலைக்குறைப்பாக



20% போக ரூ56 க்கு கிடைக்கும்






Related:


முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு! நிகழ்ச்சி நிரல்!!

Thursday, January 22, 2009

மௌனம் எனும் கொடிய ஆயுதம்!

குண்டுகள்
வெடித்து சிதறு முன்பே
ஊடகங்களி்ல்
தெரித்து விழுகின்றன
ஐ.எஸ்.ஐ, சிமி,
இலஸ்கர் இ தொய்பா,
இந்தியன் முஜாகிதீன்கள்-தான்
காரணமென்று

மழித்த மீசை
நெடுந்தாடி...
"மயிரை" வைத்தே
மதிப்பிடப்படும்
பயங்கரவாதம்!

நான்டெட்டும்
மாலேகானும்
மறுதலிக்கிறது-இம்
மதிப்பீட்டை!

சடைபிடித்த முடி
ஆளுயர தாடியோடு
அயோத்தி-தெருக்களில்
அம்மணமாய்
அலையும்
சன்னியாசிகளிடம்
மட்டுமல்ல...

கொழுப்பேறிய
உடம்போடு
அரை-அம்மணமாய்த்
திரியும்
சேத்துப்பட்டு
"சுகவாசி" யிடமும்
தேவை
எச்சரிக்கை!

கண்ணத்தில்
போட்டுக் கொள்ளும்-முன்பு
திருநீற்றுப் பையைத்
துலாவிப் பாருங்கள்-அதில்
ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து
இருக்கலாம்!

எதற்கும்
கையிலுள்ள
தண்டத்தை
தடவிப் பாருங்கள்
தொலைதூர
இயக்குவிசை
பொத்தான்-அதில்
பொதிந்துமிருக்கலாம்!

"காவி" கொடி
பிடித்தலையும்
காட்டுமிராண்டிக்
கூட்டத்திடமிருந்து
விலகியிருப்பதே
நல்லது!

இல்லையேல்
விலங்குகளாய்
நாமும் மாறிட நேரும்
குஜராத்,ஓரிஸா போல...

பார்ப்பன
பயங்கரவாதத்துக்கு
நாம் வழங்கிய
பலமான ஆயுதம்
"மௌனம்"!

மனிதனாய்
மாற
மௌனம்
கலைவோம்!

-இளங்கதிர்.

ஆர்.டி.எக்ஸ். மௌனம்!

குண்டுகள்
வெடித்து சிதறு முன்பே
ஊடகங்களி்ல்
தெரித்து விழுகின்றன
ஐ.எஸ்.ஐ, சிமி,
இலஸ்கர் இ தொய்பா,
இந்தியன் முஜாகிதீன்கள்-தான்
காரணமென்று

மழித்த மீசை
நெடுந்தாடி...
'மயிரை' வைத்தே
மதிப்பிடப்படும்
பயங்கரவாதம்!


மாற்றிக் கொள்ளுங்கள்
மதிப்பீடுகளை!

நான்டெட்,
மாலேகான்,
ஆர்.எஸ்.எஸ்.,
பி.ஜே.பி.-இது
பார்ப்பன பயங்கரவாதம்!


சடைபிடித்த முடி
ஆளுயர தாடியோடு
அயோத்தி-தெருக்களில்
அம்மணமாய்
அலையும்
சன்னியாசிகளிடம்
மட்டுமல்ல...

கொழுப்பேறிய
உடம்போடு
அரை-அம்மணமாய்த்
திரியும்
சேத்துப்பட்டு
"சுகவாசி" யிடமும்
தேவை
எச்சரிக்கை!

கண்ணத்தில்
போட்டுக் கொள்ளும்-முன்பு
திருநீற்றுப் பையைத்
துலாவிப் பாருங்கள்-அதில்
ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து
இருக்கலாம்!

எதற்கும்
கையிலுள்ள
தண்டத்தை
தடவிப் பாருங்கள்
தொலைதூர
இயக்குவிசை
பொத்தான்-அதில்
பொதிந்துமிருக்கலாம்!

அவர்கள்
நாளையே
வீசலாம்-அடுத்த
வெடிகுண்டை

நம்
'மௌனத்தை'
அதில் நிரப்பி!

தேவை
எச்சரிக்கை மட்டுமல்ல...

-இளங்கதிர்.

Friday, January 16, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு! ஜனவரி 25, 2009





முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!
****************
முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!
************************
கருத்தரங்கம்
பொதுக்கூட்டம்
கலைநிகழ்ச்சி
****************
ஜனவரி 25, 2009
அம்பத்தூர்
சென்னை
உழைக்கும் மக்கள் அனைவரும் வர்க்கமாக அணிதிரளுவோம்!
அழுகிய முதலாளித்துவத்தை புதைப்போம்!!

டாடாக்களின் புரட்சியும் மக்களைத் தின்னும் கண்டுபிடிப்புக்களும்


மக்களின் கார் பிணங்களின் மீது பவனி


“ஏனுங்க டாடாவோட நானோ காரைப் பார்த்தீங்களா?, என்ன அம்சமா இருக்கு தெரியுங்களா” என்ற சித்தாளின் உடையாடலோ, “அம்மா எனக்கு நானோ கார் வாங்கிதந்தாதான் சாப்பிடுவேன்” என்ற கெஞ்சல்களையோ கேள்விப்படவில்லை. ஆனால் இதை விட பல மடங்கு பேச்சுகள் இந்தியா முழுவதும் பேசப்பட்டதாக பத்திரிக்கைகள் புளுகிக் கொண்டிருக்கின்றன.



பத்திரிக்கைகள் டாடாவின் 1 லட்சம் ரூபாய் நானோ கார் (வரிகளுடன் 1.25 லட்சம்) வரவினை டாடாவின் புரட்சி என்றே அழைக்கின்றன. 1980 களில் இந்திய சாலைகளில் மாருதி நிறுவனம் முதல் சாலைப் புரட்சியை நடத்திகாட்டியதாகவும் இந்த நானோ கார் இரண்டாவது புரட்சியாகவும் கொண்டாடப்படுகின்றன. சிறிது டாடாவின் காரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எஞ்சின் - 624 cc, 33 php, ஒரு லிட்டருக்கு 20 கி.மி மேல், 4 ஸ்பெசல் கியர், அதிகபட்ச வேகம் 90 கி.மி. அனைத்து பாதுகாப்பு விதிகளையும் நிறைவு செய்கிறது. ஏழை நடுத்தர மக்களுக்காகவே உலகிலேயே மிக குறைவான விலையில் விற்கப்படும் முதல் கார் 2500 டாலர் (அ) 1 லட்சம். இதற்கு அடுத்தப்படியாக க்யூ க்யூ3 காரோ 2 லட்சம்.

இந்த காருக்கு இருக்கும் விற்பனைக்கான வாய்ப்பை வாய் கிழிய கிழிய நிபுணர்கள் உந்தி தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9% எட்டி விட்டது, பங்குச் சந்தை 21,000 (பலுன் ஊதிய போது) புள்ளிகளை தாண்டி எகிறிகொண்டிருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 40 லட்சம் கோடியையும், தனிநபர் சராசரி வருமானம் ரூ 40,000 ஐயும் தொட்டு வல்லரசுக்கு பிளிரிக்கொண்டிருக்கும் இந்த வேலையிலன்றி வேறெப்போது புரட்சியினை சாதிக்கமுடியும் என்ற கேள்விகளால் பத்திரிக்கைகளை நிரப்பிக் கொண்டு இருக்கின்றனர். காம்ரேட் டாடா ஆரம்பித்து வைத்த இந்த புரட்சியை நீடித்து கொண்டு செல்வதற்காகவே பல கார் நிறுவனங்கள் புதிதாக இந்தியாவில் இறங்க உள்ளன.

“உணவி , உடை, இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு மிதமிஞ்சிய பணப்புழக்கம் இருக்கும் ஒரு நாட்டில் இவ்வருடம் மட்டும் கார்களில் 75 மாடல்கள் தான் அறிமுகமாகுமென்று சற்றே கவலையளிக்கிறது”

டாடாவுக்கு மட்டும் தான் மக்கள் தலையில் மிளகாய் அரைக்க உரிமை இருக்கிறதாயென்ன என்றவாறே கடந்த பத்து மாதங்களில் மட்டும் ஆறு பெரிய நிறுவனங்களுக்குள் ரூ 18,400 கோடியில் பேரத்தில் இறங்கியிருக்கின்றன. டாடா, அசோக் லேலண்ட், பஜாஜ் போன்ற நிறுவனங்கள் மக்களுக்கு ஏற்றபடி விலை குறைவாக உள்ள காரை எப்படி தயாரிப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறதாம். டாடா ஒரு லட்ச ரூபாய்க்கு மக்கள் கார் கொடுப்பதால் நான் 1.3 லட்சத்திற்கு கார் தருகிறேன் என மல்லுக் கட்டுகிறார் ராஜீவ் பஜாஜ்.

அய்ரோப்பிய மற்றும் அமெரிக்க கார் சந்தை தேக்கமடைந்திருப்பதால் இந்தியாவில் 45 கோடி நடுத்தர மக்கள் இருப்பதாகவும், அவர்கள் அத்தேக்கத்தை (அடைப்பை) சரி செய்துவிடுவார்களென்று பன்னாட்டு கார் நிறுவனங்கள் முண்டியடித்துக் கொண்டு கடையை விரிக்கின்றன. 10 லட்சம் கார்களையும், 76 லட்சம் பைக்கு களையும் நுகரும் இந்திய சந்தையில் 2016க்குள் 40 லட்சம் கார்கள் 1 ஆண்டுக்கு திணிப்பதற்கு காத்திருக்கிறார்கள்.

இந்த மக்கள் காரின் வரவுக்கு எந்த சமூக அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை இக்கார் சமூக அக்கறையினால் உருவாக்கப்பட்டதெனில் ஜெயேந்திரன் கூட சமூக அக்கறையினாலேயே கொலைகளையும், கற்பழிப்புக்களையும் தீண்டாமையையும் நெறிப்படுத்தினான் என்றே கூறலாம். சினிமா கழிசடைகளும், ஏகாதிபத்திய நாய்களும் தாங்கள் பொறுக்கித்தின்பதற்காக இதை சமூக அக்கறையாக பயன்படுத்திக்கொள்கின்றன. மூன்று இந்தியர்களின் ஒருவர் பஞ்சைப் பராரியாக இருப்பதும், 91 கோடி மக்களின் வாழ்க்கைத்தரம் ரூ 80க்கும் கீழ் போய்விட்ட இத்தேசத்தில் இந்த ஏகாதிபத்திய “புடுங்கிகள்”, மக்களின் கவலையை மறக்க விலை குறைவாக காரைக் கண்டுபிடிக்கிறார்களாம்.

விவசாயம் செய்ய முடியாது என மறுகாலனிய சுருக்கில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் உயிரைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். வேலையில்லாத இளைஞர்களின் பட்டாளம் கோடிக்கணக்கில் பெருகிக் கொண்டிருக்கிறது. பொதுத் துறைகளை தனியார்மயமாக்கம் என்ற பெயரில் சீரழித்து தொழிலாளர்களை வீதியில் வீசியெறிக்கின்றனர். இப்படிப்பட்ட மக்களுக்காகத் தான் மக்கள் கார் தயாரிக்கப்பட்டதாம்.

ரத்தன் டாடா ஒரு பேட்டியில் கூறியது “குறைந்த லாபத்தில் காரை தயாரிக்க முடியாது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பங்களிப்பு செய்ய விரும்பினோம்…..குறைவான லாபத்தோடு சில தியாகங்களை செய்தாக வேண்டும்”

110 கோடி கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஒரு முதலாளியால் முடியும். இந்த புரட்சியை சாதிக்கவே மக்களை வெளியேற்றி நந்திகிராமில், சிங்குரில் நிலம் கையகப்படுத்தினோம் என்கிறது சிபிஎம். இதனை அடுத்த தேர்தலுக்குள் புரட்சி சாதிக்கப்பட்டு சிபிஎம்-ன் பேனர்களில் டாடா படம் கூட பொறிக்கப்படலாம். ரசியப்புரட்சியை நடத்திக்காட்டிய லெனின் படத்துடன், மாமா வேலை பார்த்த சுர்ஜித்தின் படத்தை போடும் போது மக்களின் வாழ்க்கையை (?) உயர்த்த விரும்பி தனது இலாபத்தை குறைத்துக் கொண்ட மகோன்னதத் தலைவனின் படத்தை ஏன் போடக்கூடாது என்ற வகையில் தீக்கதிர் தலையங்கம் கூட எழுதலாம்.

“முதாலளித்துவத்தின் எந்த கண்டுப்பிடிப்பும் மக்களுக்காகயிராது சந்தைக்காகவே இருக்கும்”

கார் என்பதைப் பொறுத்த வரை இன்று மக்களுக்கு இடையூராகவே உள்ளது. ஒரு காரில் அதிகபட்சம் 6 பேர் உட்கார முடியும். இரண்டு கார்களின் அளவானது ஒரு பேருந்தின் அளவுக்கு சமமாக உள்ளது. குறைந்தபட்சம் 60 பேர் உள்ள பேருந்தின் இடத்தை 12 பேர் கொண்ட கும்பல் ஆக்கிரமிக்கின்றது. காரை வாங்குவதால் நடுத்தர மக்களும், அதனை பயன்படுத்துவதால் நடுத்தர - ஏழை மக்களும் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் இரு சக்கரவாகனங்களின் எண்ணிக்கை இறைவாகவே இருந்தது. இன்று இரு சக்கரவாகனமின்றி வாழ்நிலை மிகவும் சிரமம் என்ற நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது.

இந்த இருசக்கர வாகனத்தின் பெருக்கம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதே! சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்துவதை தவிர்த்துவிட்டு திரும்பிபக்கமெல்லாம் விளம்பரங்கள் “சார் பைக் லோன் வேண்டுமா உடன் தொடர்புக்கு!!” என்று. இவை விளம்பரங்களாக செயல்படவில்லை. கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற ஆணையாகவே இருந்தது. அப்படி வாங்கியவர்கள் லோன் கட்டமுடியாமலோ (அ) Petrol-க்கென்றே வருமானத்தில் பெரும்பகுதியை செலவழித்துக் கொண்டு இருப்பதாக வேதனையோடு சொல்கிறார்கள் இப்படி “இந்த சனியனாலதான் எல்லாப் பிரச்சினையுமே , இருந்தாலும் இதைவிடமுடியலையே!

கடந்த ஐந்து ஆண்டுகளில் Petrol பொருட்களின் விலை 5 மடங்காகியிருக்கிறது. தற்போது மீண்டும் Petrol, டீசல், கேஸ் விலையை ஏற்றப்போவதாக அரசு கூறிவருகிறது. இந்நிலையில் அறிமுகப்படுத்தப்படும் மக்கள் கார் மக்களின் வாழ்க்கையை கேலிக்குரிய ஒன்றாகவே மாற்றும். பைக்கிற்கான கடனைப் போலவே தற்போன காருக்கான கடன் சலுகைகள் மிக அதிகமாக உள்ளது. சமூக அடையாளத்திற்கான இடத்தை நகரக்ங்களைப் பொருத்தவரை பைக்கிடமிருந்து கார் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம் காருக்கான மூலதன செலவு (initial cost) அதிகமாகவும், பராமரிப்பு செலவு (maintenance cost) குறைவாகவும் இருந்தது. தற்போது மூலதன செலவு குறைந்தும், பராமரிப்பு செலவு அதிகமாகவும் மாற்றப்படுகின்றது. எப்படியிருந்தாலும் தன்னுடைய லாப விகித்ததை சரி செய்து கொள்கிறார்கள் முதலாளிகள்.

“சாலைகள் மேம்பட வேண்டும் என்பது உண்மைதான் அதற்காக குறைந்த வருமானம் கொண்டவர்களின் வாழ்கைத்தரம் உயரக் கூடாது என சொல்லக் கூடாது” என்கிறார்கள் புத்திசாலிகள். முதலாளித்துவ நாய்களின் வாலை பிடித்து கொண்டு திரியும் இந்த அறிவிஜீவிகள் கிராமப்புறங்களில், ஏன் சென்னை போன்ற நகரங்களின் தெருக்களில் கூட சாலைகள் குண்டும் குழுகளும் பல்லைக்காட்டிக்கொண்டிருப்பதை ஒருக்காலும் பேசமாட்டார்கள். உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சீரழித்தவர்களே சொல்கிறார்கள். “உங்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றப் போகிறோம், நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்னேறித்தானாக வேண்டும்”

இன்னமும் இந்தியக்கிராமங்களில் மக்கள் டிராக்டரில் பயணம் செய்வதால் இந்தக்கார் பெரிய ஹிட் ஆகுமென்கிறது டாடா. 50,000 ரூபாய் கொடுத்து பைக்வாங்கும் ஒருவரால் கொஞ்சம் சிரமப்பட்டால் லட்சரூபாய் கார்வாங்கலாம் என்ற கூற்றும் நிலவுகிறது. இதில உண்மையும் இருக்கிறது. மக்களை மேலும் மேலும் கடனாளியாக்க இப்படி எத்தனையோ திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பட்டபின் திருந்தலாம் என்று வாங்கிய காரை விற்க போகும் போது அது 3/1 பங்கு கூட பெறாமலிருக்கும். பைக்காக இருக்கும்பட்சத்தில் நான்கு தெரு தள்ளி கூட நண்பர் வீட்டில் நிறுத்திவிடலாம் மாத தவணை வசூலிக்கும் குண்டர்களிடமிருந்து தப்பிப்பதற்காக. காரை எங்கு போய் நிறுத்துவது?

இன்று வீட்டு வாடகைக்கு இடம் கிடைக்காத நிலையில் காருக்காக தனியாக இடம் தேடி நடுத்தர வர்க்கம் அலையும் நிலை வரலாம். இது அதிகப்படியான கற்பனை அல்ல. மறுகாலனியாதிக்கத்திற்கெதிராக களத்திலிறங்காத வரை இது தொடர்ந்து கொண்டே தானிருக்கும்.

“வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று நினைப்பவர்களின் நோக்கத்தை சிறுபிரிவினர் விரும்பாதது போலத் தெரிகிறது…. மீதமுள்ள சமூகத்தினருக்காக முடிவெடுக்க சிறுபிரிவினருக்கு உரிமையிருக்கிறதா என்பதே என் கேள்வி” என்கிறான் டாடா. ரத்தன் டாடா முடிவெடுத்து விட்டார் கார் தயாரிக்க, அதுவும் லட்ச ரூபாய்க்கு மக்களின் வாழ்க்கைததரத்தை உயர்த்துவதற்காக. அவர் முன்னரே சொன்னது போல் குறைவான லாபத்தை அவர் ஏற்பார், தியாகங்களோடு, உயர்ப்பலியையும் நந்திகிராம், சிங்கூர் மக்கள் ஏற்க வேண்டும்.

இன்று நீதிமன்றத்தில் இந்த சிபிஎம் குண்டர்கள் வைத்த டாடாவின் குறைந்த லாபத்தையும், மக்களின் அகதிகளாக வெளியேற்றப்படுவதையும் சரிபார்த்த “நீதிமான்கள்” நிலத்தை கையகப்படுத்தியது சரிதான் என்று அதனை எதிர்த்து தொடர்ந்த 11 வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிட்டது.

மக்கள் கார் (!?) புரட்சிக்கு பின்னாலுள்ள பிளாஷ் பேக்கை பார்ப்போம். “2003ம் ஆண்டு ஒரு நாள் மும்பையில் இரவு மழையின்போது சென்று கொண்டிருந்தார் டாடா. அப்போது ஒரு இளந்தம்பதி இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார்களாம். மழைநேரத்தில் இந்த அபாயகரமான பயணம் அவர் மனதில் விதையாகி தற்போது மரமாகிவிட்டதாம்”

அய்யா, புரட்சி இப்படி ஒரு முதலாளியின் செரிக்காத வாயு நாற்றத்திலிருந்து எழாது.

புரட்சி என்பது மக்களின் போர்க்குரல், எரிமலையின் சீற்றம். இந்த சீற்றம் நிகழும் அன்று காம்ரேடு டாடாக்களும், அவர்களின் பாதந்தாங்கிகளாக அருவருடிகளும், போலிகளும் சமாதியாகிக் கொண்டிருப்பார்கள்.

நன்றி இரும்பு

முதலாளித்துவம் கொல்லுது - சத்யம் IT ஊழியரின் தற்கொலை




தற்கொலை செய்து கொண்ட சத்யம் ஊழியர்


சத்யம் கம்பேனி 420 வேலை செய்து மாட்டிக் கொண்ட கதை இப்போது அனைவருக்கும் தெரிந்த விசயமாகிவிட்டது. இதே போல ஊழல் குற்றச்சாட்டில் விப்ரோ நிறுவனமும் அசிங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஒட்டிய கிளைக் கதையில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி கும்பலை சேர்ந்தவரின் பாலியல் வக்கிர கதைகள் மீண்டும் அரங்கிற்கு வந்து அசிங்கப்பட்டது.

இத்தனை அயோக்கியத்தனமும் செய்யும் இந்த பகாசுர சூதாட்ட முதலாளிகள், 420 பேர்வழிகள் எந்த தண்டனையும் அனுபவிப்பது இல்லை. ஆனால் எந்த தவறும் செய்யாதா அந்த நிறுவனங்களில் பணி புரிபவர்கள்தான் இதன் கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள். இந்திய தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கொழுத்த பணம் சேர்த்த தொழில்துறை முதலாளிகள் அந்த பணத்தை சூதாடி தோற்றனர். இன்று சூதாட்டத்தின் நஸ்டத்தை தொழிலாளர் தலையில் சுமத்தி வேலையை விட்டு நீக்குகிறார்கள், வயிற்றில் அடிக்கிறார்கள்.

அது போலவே இந்திய IT துறை சுதாடிகளும், 420 களும் செய்கிறார்கள். கடந்த சில மாதங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் வேலையை விட்டு தூக்கப்பட்டுள்ளனர் IT துறையில். IT துறை சூப்பரு சூப்பரு என்று சொல்லி எல்லாரையும் அதனையே படிக்க சொல்லி ஊக்கப்படுத்திய அரசுகளோ இன்று IT துறை கவிழ்ந்து கிடக்கும் நேரத்தில் முதலாளிகளுக்கு அறிவுரை வழங்கி காப்பாற்றுகிறது. இந்த அரசை நம்பி IT படித்தவர்களைப் பற்றியோ அல்லது விவசாயம் செத்து போனதால் நகரத்துக்கு வந்த தொழில்சாலை தொழிலாளி பற்றியோ இந்த அரசுக்கு கவலையில்லை. வாழ்வையிழந்த, எதிர்காலம் நிச்சயமற்ற சதாரண மக்களுக்கு வாய்க்கரிசி போட வருகிறது அரசு. முதலாளிகளுக்கோ சின்ன எறும்பு கடி என்றால் கூட பெயில் அவுட் எடுக்கிறது.

வெட்கமின்றி கொஞ்சம் கூட பயமின்றி சத்யம் கம்பேனியில் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சொல்லி அறிவுரை செய்துள்ளது இந்திய அரசு. இதன் மூலம் அதனது லாபம் 20% அதிகமாகும் என்று இந்த அறிவுரையை சொல்லியுள்ளது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு இன்னும் வரவில்லை என்று நாம் எண்ணியிருந்த வேளையில் மேலே பதியப்பட்டுள்ள சத்யம் ஊழியரின் தற்கொலை செய்தி வெளி வந்துள்ளது. அவரை வேலையை விட்டு தூக்கியதால் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவருகிறது.

எந்தளவுக்கு இந்த அரசு IT ஊழியர்களையும், இந்திய தொழிலாளர்களையும் கேவலமாக, முதுகெலும்பு அற்றவர்களாக நினைத்திருந்தால் 10,000 பேரை வேலையை விட்டு தூக்கிவிட அறிவுரை சொல்லியிருக்கும். மோசடி செய்தவனெல்லாம் சொகுசாக வலம் வருகிறான். வயிற்றுப் பிழைப்புக்கு கிடைத்த வேலையை செய்யும் சதாரணம் மக்களோ இப்படி உடனுக்குடன் தண்டனை அனுபவிக்கிறார்கள்.

ஒரு படத்தில் வடிவேலு சொல்லுவார், ஓரமா நின்னு பாத்தத்துக்கு தண்டனையாடா என்று அது போல முதலாளிகளின் மோசடிகளை நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்ததற்கு நமக்கு தண்டனையா? இனிமேலும் இதை அனுமதிக்க முடியாது. இவர்கள் இனிமேலும் இந்த நாட்டை அதன் உற்பத்தியை நிர்வாகிக்கும் தகுதியை கொண்டிருக்க முடியாது. நாம்தான், மக்கள்தான் அனைத்தையும் உருவாக்குகிறோம் இதனை நாமே நிர்வாகிப்போம்.

தனிமனித லாப வெறியில் வித விதமாக சூதாடி, மோசடி செய்து, சதி திட்டம் தீட்டி நாட்டை நாசமாக்கும் பன்னாட்டு, தரகு பாகசுர முதலாளிகளை நாட்டை விட்டு விரட்டினால்தான் அனைவருக்கும் விடுதலை. வருத்தபப்ட்ட பாரம் சுமந்தது போதும் IT ஊழியர்களே. உங்களது சகோதரர்கள் உங்களுடன் தான் இருக்கிறார்கள். சிறிது கண் திறந்து பாருங்கள்.

முதலாளித்துவம் கொல்லும்! கம்யுனிசமே வெல்லும்!!

அசுரன்
ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!
..
விப்ரோ, சத்யம் போன்ற கம்பேனிகள் மோசடி 420 பேர்வழிகள் - உலக வங்கி அறிவிப்பு!!
..
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!
..
இங்கு கிழிந்த டவுசருக்கு மாற்றாக புது டவுசர் கிடைக்கும்!! - ரொம்ப நல்லவர்கள் கடை!!
..
அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!
..
ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!
நன்றி அசுரன்

டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி விடுதியை திறக்க வாக்குறுதி! இது வாதாடியல்ல - போராடி பெற்ற உரிமை!

Related Links:
புமாஇமு - பிரசுரங்கள், சுவரொட்டிகள்
மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற! தீண்டாமை குற்றம் செய்த முக்குலத்தோர் மாணவர் பேரவையைச் சார்ந்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
சாதி-மத வெறி அமைப்புகளைப் புறக்கணிப்போம்! மாணவர்களாகிய நாம் ஒரு வர்க்கமாக ஒன்றிணைவோம்!
ஆதிக்க சாதிவெறி சக்திகள் மீது நடவடிக்கை எடு!
..
தமிழரங்கம் - கட்டுரைகள்
தேவை : சாதிக்கெதிராய் கலகம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்
சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியுள் மையங்கொண்ட இந்தச் சாதியக் கலவரமானது
சட்டம் படிக்க வந்த காட்டுமிராண்டிகளின் கதை....
..
வினவு - கட்டுரைகள்
சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!
சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை - அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !ஆனந்த விகடனின் சாதி வெறி !

கால்ஸ் சாராய ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம்!


இணைப்பு