Thursday, January 22, 2009

ஆர்.டி.எக்ஸ். மௌனம்!

குண்டுகள்
வெடித்து சிதறு முன்பே
ஊடகங்களி்ல்
தெரித்து விழுகின்றன
ஐ.எஸ்.ஐ, சிமி,
இலஸ்கர் இ தொய்பா,
இந்தியன் முஜாகிதீன்கள்-தான்
காரணமென்று

மழித்த மீசை
நெடுந்தாடி...
'மயிரை' வைத்தே
மதிப்பிடப்படும்
பயங்கரவாதம்!


மாற்றிக் கொள்ளுங்கள்
மதிப்பீடுகளை!

நான்டெட்,
மாலேகான்,
ஆர்.எஸ்.எஸ்.,
பி.ஜே.பி.-இது
பார்ப்பன பயங்கரவாதம்!


சடைபிடித்த முடி
ஆளுயர தாடியோடு
அயோத்தி-தெருக்களில்
அம்மணமாய்
அலையும்
சன்னியாசிகளிடம்
மட்டுமல்ல...

கொழுப்பேறிய
உடம்போடு
அரை-அம்மணமாய்த்
திரியும்
சேத்துப்பட்டு
"சுகவாசி" யிடமும்
தேவை
எச்சரிக்கை!

கண்ணத்தில்
போட்டுக் கொள்ளும்-முன்பு
திருநீற்றுப் பையைத்
துலாவிப் பாருங்கள்-அதில்
ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து
இருக்கலாம்!

எதற்கும்
கையிலுள்ள
தண்டத்தை
தடவிப் பாருங்கள்
தொலைதூர
இயக்குவிசை
பொத்தான்-அதில்
பொதிந்துமிருக்கலாம்!

அவர்கள்
நாளையே
வீசலாம்-அடுத்த
வெடிகுண்டை

நம்
'மௌனத்தை'
அதில் நிரப்பி!

தேவை
எச்சரிக்கை மட்டுமல்ல...

-இளங்கதிர்.

No comments:

இணைப்பு