Tuesday, October 28, 2008

பெட்ரோல் டீசல் விலை உயர்வு :மக்களின் மரணத்தின் மீதே இந்திய அரசின் கொடி ஏற்றப்படுகிறது!

50 ரூபாய்க்கு 1 லிட்டர் பெட்ரோல் விற்றபோது அரசின் வருமானம் ரூ 25 க்கும் மேல். அதாவது ஆண்டுக்கு 1.25 லட்சம் கோடி. பின்னர் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 147 டாலர் விலையேற்றத்தை காரணம் காட்டி உடனே விலையினை உயர்த்திய இந்திய அரசு, அதே பேரல் தற்போது 68 டாலருக்கு குறைவாக இறங்கி உள்ளபோது விலையினை குறைக்க மறுக்கிறது.
..
இந்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் வருமானம் என்பது இவ்வாறு மக்களிடம் இருந்து வரியாக பிடுங்குவதும், பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதும் மூலம் மட்டுமே பெறப்படுகிறது.
..
அப்படி பெற்று போடும் பட்ஜெட் யாருக்காக செலவு செய்யப்படுகிறது.
முழுக்க முழுக்க பன்னாட்டு கம்பெனிகள் - தரகு முதலாளிகளின் தேவைக்கான பாலங்கள், சாலைகள் போன்ற உள்நாட்டு கட்டமைப்பை உருவாக்கவும், தெற்காசிய ரவுடியாக தான் மாறுவதற்காக ஆயுத தளவாடங்கள் வாங்கி குவிப்பதற்குமே.
..
இந்த உள்நாட்டு கட்டமைப்பை தான் போட்டி போட்டு கலைஞர், இந்து மதபயங்கரவாதி மோடி, போலி புத்ததேவ் போன்ற மறுகாலனியாக்க அடிமைகள் செய்து வருகின்றன. இந்த ஆயுத தளவாடங்கள் தான் ஈழத்தில் தமிழர்களை கொல்வதற்கு சிங்கள பேரினவாத அரசுக்கு வழங்கப்படுகிறது.

No comments:

இணைப்பு