Saturday, November 15, 2008

நாம் என்ன செய்யப் போகிறோம்!

நவம்பர்‍‍‍‍-7,2008
ரஷ்யப் புரட்சியின்
91-வது ஆண்டு்விழா!
..
உள்ளமெங்கும்
மகிழ்ச்சி ததும்பி
அரங்கமெங்கும்
நிரம்பி வழிந்த
குழந்தைகளின்
குதூகலமும்
அரங்க நிகழ்வுகளும்

ரஷ்யாவைப்போல்
இங்கோர்
புரட்சி நிகழ்ந்து விட்டதாய்
என்னும்படியாக
எதிர் காலத்திற்கே
இட்டுச்சென்றது
என்னை!

குறையேதும்
காணுமுடியாத
குழந்தைகளின்
அரங்கேற்றத்தில்...

தொழில்முறை கலைஞனின்
செய்நேர்த்தி கொண்ட
இசைச்சித்திரக்குழு
மாணவர்களின்
திறமையில்...

மனதை வருடும்
இசையில்
பாரதிதாசனின்
தாலாட்டுப்பாடல்-தந்த
பரவசத்தில்...

"எங்கிருந்து
ஒலிக்கிறது இந்தக்குரல்"-
வினாயெழுப்பி
வியக்கவைத்த
அந்தக் கிழட்டு
இளைஞனின்
கம்பீர குரலின்
பிரமிப்பில்...

மொத்த நிகழ்வும்
தந்த போதையில்
இலயித்துப்போன
என்னை...

நிகழ்காலத்துக்கு
என்'காலத்'துக்கு
இழுத்து வந்தது
"இப்படியிருந்தால்
எப்படி வரும் புரட்சி?"-
உரைவீச்சு.

இமை மூடி
செவி பொத்திய போதும்

"என்னால்
இவ்வளவுதான் தோழர் முடியும்..."

"கொஞ்சம்
குடும்பத்துல பிரச்சிணை..."

"பொதுநிகழ்ச்சிக்கு வார்ரேன்
நன்கொடை தார்ரேன்
அதுக்கு மேல..."

இன்னும் பல விதமாய்...

செவுளில்
மோதிச் சென்றன...

இன்று காலை வரை
நான் சொல்லி வந்த
அற்ப காரணங்கள்!

"எப்படிங்க
இருந்தது நிகழ்ச்சி?"-
தோழரின் கேள்வி...

செவியில் நுழைந்து
மனதை குடைந்து
என்னுள்
எதிரொலித்துக்
கொண்டேயிருக்கிறது...

புரட்சிக்காக
"நாம்
என்ன செய்யப் போகிறோம்?"என்று!

_ இளங்கதிர்.

No comments:

இணைப்பு