Tuesday, July 15, 2008

அன்பார்ந்த பள்ளி-கல்லூரி மாணவர்களே!

  • அரசு கல்விக் கட்டணம் இல்லங்குது
    அப்பறம் பி.டி.ஏ மூலமா கொள்ளையடிக்குது!
  • கல்வி கொடுத்த கவர்மெண்டு
    டாஸ்மாக் சாராயத்தை விற்குது!
    கள்ளச்சாராய ரவுடிகளெல்லாம் கல்வியை விற்குறான்!
    இனியும் ஒதுங்கிச் செல்வது அவமானம்!
    ஓங்கி குரலெழுப்புவதே தன்மானம்!
  • படிக்க வகுப்பு இல்ல
    பாடம் நடத்த வாத்தியார் இல்ல
    குடிக்கக் கூட தண்ணி இல்ல
    அடிப்படை பிரச்சனையை
    தீர்த்து வைக்க வக்கில்லாமல்
    'அனைவருக்கும் கல்வி' என்று
    ஆளுகிறவங்க பேசுவது அத்தனையும் ஏமாற்று!
    பு.மா,இ.மு தலைமையிலான போராட்டமே ஒரே மாற்று!
  • செமஸ்டர் வந்தது! தேர்வு இரண்டு முறையானது!
    பாக்கெட் பணமோ பறிபோகுது!
  • சிப்டு முறை வந்தது! நேரம் மட்டுமே மாறுது!
    புதுசா வாத்தியாரும் போடல! அடிப்படை பிரச்சனைளும் தீரல!
  • ஜனநாயகம் என்று சொல்லி கவுன்சிலிங் நடக்குது!
    ஜனநாயகத்தை கொடுக்கின்ற
    கல்லூரித் தேர்தல் எங்கே போனது!
  • கல்லூரியைக் கை கழுவது
    கல்வி வியாபாரத்தை கொழுக்க வைக்க
    அரசு பல்கலைக்கழகமா மாற்றுது!
    இதுவரை நீ.படித்து வந்த
    பி.ஏ.,பி.எஸ்.சியும் பறிபோகுது!
  • எப்படியும் எதிர்காலம் உண்டென்பது பகற்கனவு!
    இதற்கெதிராக போராட வேண்டுமென்பதே
    பகத்சிங் கண்ட கனவு
    இன்றே பு.மா.இ.மு-வில் இணைந்திடு!
    உரிமைக்கான போராட்டத்தை தொடங்கிடு!!

No comments:

இணைப்பு