Saturday, December 13, 2008

ஆதிக்கசாதி மாணவர்களின் தீண்டாமை கொடுமைக்கு பதிலடி கொடுத்த தலித் மாணவர்களுக்கு உடனே ஜாமின் வழங்கு!


1 comment:

kalagam said...

இம்மோதலுக்கு காரணத்தை நாம் தோண்டியெடுக்க சில ஆண்டுகள் பின்னோக்கி
பார்க்க வேண்டும்.தென்,வடமாவட்டங்களில் நடந்த சாதி கலவரமே இதன் வேர்.கொடியங்குளம்,ஊஞ்சனை,மேவளவு,போன்ற சம்பவங்கள் தாழ்த்தப்பட்ட
மக்களி¢ன் பயமாய், கோபமாய், இன்னும் ஆறாமல் இருக்கின்றது.மீண்டுமொரு தாக்குதலுக்கு தருணம் பார்த்து ஆதிக்க சாதி வெறியர்களும் காத்து கொண்டிருக்கின்றார்கள்.பலரும் சொல்வதை போல் என்ன தான் “இருந்தாலும் அந்த
பையனை விட்டிருக்கலாம்”இவர்கள் விடாததற்கு காரணம் இருக்கின்றது.தன் ரத்த
சொந்தங்கள் எல்லாம் தூங்கும் போது கழுத்தறுப்பட்டும்,இதை விட இன்னும் இன்னும்
இன்னும் அதிகமாக கெஞ்சி கதறிய போதும் கொலை செய்யப்பட்டார்களே அது தான்
அந்த காரணம்.தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகளிரண்டாகவே பிரிக்கப்பட்டிருக்கின்றன.1.தாழ்த்தப்பட்ட மானவர் விதி 2.மற்ற சாதி மாணவர்களின் விடுதி. தாழ்த்தப்பட்ட மாணவர்களில் பெரும்பாலும் மிக ஏழை பிரிவை சேர்ந்தவர்கள்.
எப்படி மூத்திர மற்றும் சாக்கடை நாற்றத்தில் வாழ்ந்தார்களோ அதே நிலை துளியும்
மாறாது தாழ்த்தப்பட்ட மாணவர் விதிகளில் வாழ்கின்றனர்.இது முற்றிலும் உண்மை
ஒருமுறை தாழ்த்தப்பட்ட மாணவர் விதிக்கு சென்றிருந்தேன். அறைக்கு வெளியில்
சோறு இறைந்து கிடந்தது.ஒரு மாணவனிடம் இது குறித்து கேட்டேன்.அவர் பதிலேதும்
பேசாது ஒரு தட்டில் சோற்றை போட்டு தந்தார்.அப்போது தான் தெரிந்தது தாழ்த்தப்பட்ட மாணவர்க்கு சோறு தாழ்ந்த நிலையில் தான் படுகின்றது இந்த சமத்துவ அரசால் என்று.

http://kalagam.wordpress.com/

இணைப்பு