Thursday, January 22, 2009

மௌனம் எனும் கொடிய ஆயுதம்!

குண்டுகள்
வெடித்து சிதறு முன்பே
ஊடகங்களி்ல்
தெரித்து விழுகின்றன
ஐ.எஸ்.ஐ, சிமி,
இலஸ்கர் இ தொய்பா,
இந்தியன் முஜாகிதீன்கள்-தான்
காரணமென்று

மழித்த மீசை
நெடுந்தாடி...
"மயிரை" வைத்தே
மதிப்பிடப்படும்
பயங்கரவாதம்!

நான்டெட்டும்
மாலேகானும்
மறுதலிக்கிறது-இம்
மதிப்பீட்டை!

சடைபிடித்த முடி
ஆளுயர தாடியோடு
அயோத்தி-தெருக்களில்
அம்மணமாய்
அலையும்
சன்னியாசிகளிடம்
மட்டுமல்ல...

கொழுப்பேறிய
உடம்போடு
அரை-அம்மணமாய்த்
திரியும்
சேத்துப்பட்டு
"சுகவாசி" யிடமும்
தேவை
எச்சரிக்கை!

கண்ணத்தில்
போட்டுக் கொள்ளும்-முன்பு
திருநீற்றுப் பையைத்
துலாவிப் பாருங்கள்-அதில்
ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து
இருக்கலாம்!

எதற்கும்
கையிலுள்ள
தண்டத்தை
தடவிப் பாருங்கள்
தொலைதூர
இயக்குவிசை
பொத்தான்-அதில்
பொதிந்துமிருக்கலாம்!

"காவி" கொடி
பிடித்தலையும்
காட்டுமிராண்டிக்
கூட்டத்திடமிருந்து
விலகியிருப்பதே
நல்லது!

இல்லையேல்
விலங்குகளாய்
நாமும் மாறிட நேரும்
குஜராத்,ஓரிஸா போல...

பார்ப்பன
பயங்கரவாதத்துக்கு
நாம் வழங்கிய
பலமான ஆயுதம்
"மௌனம்"!

மனிதனாய்
மாற
மௌனம்
கலைவோம்!

-இளங்கதிர்.

1 comment:

Anonymous said...

//பார்ப்பன
பயங்கரவாதத்துக்கு
நாம் வழங்கிய
பலமான ஆயுதம்
"மௌனம்"!//

அருமை! தொடர்ந்து எழுதுங்கள்!

இணைப்பு